பதிவு செய்த நாள்
15
மார்
2018
11:03
திருச்சி: பஞ்சபூத தலங்களில், நீர் தலமான திருவானைக்காவல், ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவிலில், பங்குனி தேர் திருவிழாவுக்கான, எட்டு திக்கு கொடியேற்றம், நேற்று நடந்ததுவிழாவையொட்டி, சோமஸ்கந்தர், அம்பாளுடன் ஏக சிம்ம வாகனத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து, தினமும், சூரிய பிரபை, சந்திர பிரபை உள்பட பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெறும். வரும், 19ம் தேதி பங்குனி தேரோட்டம் நடக்கிறது. வரும் 23ம் தேதி, நடராஜர் புறப்பாடும், தீர்த்தவாரியும் நடைபெறும். 24 முதல் 26ம் தேதி வரை, சுவாமி அம்பாள் பல்லக்கு ஊர்வலமும், 27 முதல் 29ம் தேதி வரை மவுனோத்ஸவம், 30ம் தேதி முதல் ஏப்ரல் 1ம் தேதி வரை, சண்டிகேஸ்வரர் உற்சவமும் நடைபெறும்.