பதிவு செய்த நாள்
22
மார்
2018
12:03
மகுடஞ்சாவடி: இளம்பிள்ளை, சந்தைப்பேட்டையிலுள்ள மாரியம்மன் கோவில் திருவிழா, நேற்று முன்தினம் இரவு, பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி, மூலவர் முன்புறம், கம்பம் நடப்பட்டது. ஏராளமான பக்தர்கள், தங்கள் வீடுகளிலிருந்து, குடங்களில் நீர் கொண்டு வந்து, கம்பம் மீது ஊற்றி, சுவாமியை வழிபட்டுச்சென்றனர். ஏப்., 7 வரை, மாரியம்மன், காளியம்மனுக்கு, தினமும் அபிஷேக ஆராதனை நடக்கும்.