சிவகாசி, திருத்தங்கல் நின்ற நாராயணபெருமாள் கோயில் நுழைவுவாயில் அருகே பாபநாச தீர்த்தம் தெப்பம் வடிவில் உள்ளது. பாறைகள் சூழ்ந்து அழகிய காட்சியாக அமைந்திருக்கிறது. இதில் குளித்தால் செய்த பாவங்கள் போகும் என்பது ஐதீகம். இப்பெயர் பெற்ற தீர்த்தம் 15 ஆண்டுகளாக யாருக்கும் பயனளிக்காமல்பூட்டியே கிடக்கிறது. இதன் நுழைவு வாயில் இருக்கும் கல் மண்டபம் சேதமாகிஇடித்து விழுகிறது.கழிவு நீர் கலப்பதால் பாசிபடர்ந்து நாற்றம் வீசிவருகிறது. கோயிலின் புனிதம் கெடுவதோடு நிலத்தடி நீருக்கும் பெரும் பாதிப்பை தருகிறது.