உபநிஷதக் கருத்துக்கள் ஒருங்கமைக்கப்பட்ட பகுதியே பிரம்ம சூத்திரம். மாமுனியாகிய பாதராயணர் எனப்படும் வியாசர் தொகுத்த இந்த நூல் எல்லாவித வேதாந்தத் தத்துவங்களுக்கும் ஆதார நூலாகும். இது வேதங்களின் லட்சியம் என்றே வர்ணிக்கப்படுகிறது. 555 சுலோகங்கள் கொண்ட இந்நூல் 4 அத்தியாயங்களாகப் (பகுதிகளாக) பிரிக்கப்பட்டுள்ளது.
ஜீவ பிரம்ம ஐக்கியத்தையும், அதன் அனுபூதிக்கான வழிகளையும், தியானங்களையும், ஆன்மிகச் சாதனைகளையும் அவற்றின் நிறைவையும் விரிவாகச் சொல்கிறது. இந்நூலை அடிப்படையாகக் கொண்டே அத்வைதம், விசிஷ்டாத்வைதம், துவைதம் போன்ற வேதாந்த தத்துவப் பிரிவுகள் பிரபலமாயின.