பதிவு செய்த நாள்
20
ஏப்
2018
05:04
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா ஏப்.,17 வாஸ்து சாந்தியுடன் துவங்கி ஏப்.,29 வரை நடக்கிறது. விழாவில் சுவாமி, அம்மன் தினமும் வெவ்வவேறு வாகனங்களில் உலா வந்து அருள்பாலிக்கின்றனர்.
அதன் விபரம்:
ஏப்.17: காலை 10.05 முதல் காலை 10.29 மணிக்குள் கொடியேற்றம்.
ஏப்.18: காலை கோயில் குலாலர் மண்டகப்படியில் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளல்.
இரவு 7 மணிக்கு கற்பக விருட்சம், சிம்ம வாகனத்தில் நான்கு மாசிவீதிகளில் பக்தி உலா.
ஏப்.,19: காலை 7 மணிக்கு கோயில் முத்துராமய்யர் மண்டகப்படியில் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளில் பக்தி உலா
இரவு 7 மணிக்கு பூதம், அன்னம் வாகனத்தில் நான்கு மாசி வீதிகளில் பக்தி உலா.
ஏப்.,20: காலை 7 மணிக்கு கோயில் கல்யாண சுந்தர முதலியார் மண்டகப்படியில் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளில் பக்தி உலா
இரவு 7 மணிக்கு கைலாச பர்வதம், காமசதேனு வாகனத்தில் நான்கு மாசி வீதிகளில் பக்தி உலா.
ஏப்.,21: காலை 9 மணிக்கு வில்லாபுரம் பாவக்காய் மண்டகப்படியில் தங்கப்பல்லக்கில் எழுந்தருளல்.
மாலை 6 மணிக்கு தங்கப்பல்லக்கில் நான்கு சித்திரை வீதிகளில் பக்தி உலா.
ஏப்.,22 காலை 9 மணிக்கு மாசி வீதிகளில் தங்கச்சப்பரத்தில் பக்தி உலா.
இரவு 7 மணிக்கு தங்க குதிரை வாகனத்தில் நான்கு மாசி வீதிகளில் பக்தி உலா.
ஏப்.,23: காலை 7.30 மணிக்கு நான்கு மாசி வீதிகளில் தங்கச்சப்பரத்தில் பக்தி உலா.
இரவு 7.30 மணிக்கு தங்க ரிஷப, வெள்ளி ரிஷப வாகனத்தில் நான்கு மாசி வீதிகளில் பக்தி உலா.
ஏப்.,24: காலை 8 மணிக்கு கோயில் மீனாட்சி நாயக்கர் மண்டகப்படிக்கு தங்க சப்பரத்தில் சுவாமி, அம்மன் பகல் 12 மணிக்கு எழுந்தருளல்.
இரவு 7 மணிக்கு நந்திகேசுவரர், யாளி வாகனத்தில் நான்கு மாசி வீதிகளில் பக்தி உலா.
ஏப்.,25: காலை 10 மணிக்கு தங்க பல்லக்கில் மேலமாசி வீதி சம்பந்தர் சுவாமி ஆதீனம் கட்டுச்செட்டி மண்டகப்படியில் தங்கி கோயிலுக்கு வரல்.
இரவு 7.40 மணிக்கு மீனாட்சி அம்மனுக்கு அம்மன் சன்னதி ஆறுகால் பீடத்தில் ’பட்டாபிஷேகம்’. பின், அம்மனுக்கு கிரீடம் சாற்றி செங்கோல் கொடுக்கும் விழா.
இரவு 9மணிக்கு வெள்ளி சிம்மாசனத்தில்வாகனத்தில் நான்கு மாசி வீதிகளில் பக்தி உலா.
ஏப்26: காலை 7 மணிக்கு மரவர்ண சப்பரத்தில் நான்கு மாசி வீதிகளில் பக்தி உலா.
மாலை 6 மணியளவில் இந்திர விமானத்தில் நான்கு மாசி வீதிகளில் பக்தி உலா.
ஏப்27: காலை 9.05 மணிக்கு மேல் 9.29 மணிக்குள் திருக்கல்யாணம்
இரவு 7.30மணியளவில் யானை- ஆனந்த ராயர் பூப்பல்லக்கில் நான்கு மாசி வீதிகளில் பக்தி உலா.
ஏப்28: காலை 6 மணிக்கு பெரிய தேரில் நான்கு மாசி வீதிகளில் பக்தி உலா. (தேரோட்டம்)
இரவு 7 மணிக்கு சப்தாவர்ண சப்பரத்தில் நான்கு மாசி வீதிகளில் பக்தி உலா.
ஏப்.,29: தேவேந்திர பூஜை. கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளல்.
இரவு 7 மணிக்கு வெள்ளி ரிஷப வாகனத்தில் நான்கு மாசி வீதிகளில் பக்தி உலா.