Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வலிக்காமல் வாழ்க்கை இல்லை! பெரியவர்களை அவமதிக்காதீர்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
உத்தரவு இட்டதற்கு நன்றி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2018
03:06

ஒரு மடத்தில் இருந்த துறவி, ஏழைமுதியோர்களுக்கு விருந்தளிக்க விரும்பினார். ஆனால், கையில் பணமில்லை.“கடவுளே! விருந்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்” என்று மட்டும் வேண்டிக் கொண்டார். தன் சீடர்களை அழைத்து, விருந்துக்கான ஏற்பாட்டைச் செய்யும்படி கூறினார்.விருந்து அன்றுஏராளமான முதியவர்கள் ஆசையோடு காத்திருந்தனர். தட்டு, தண்ணீர் வைத்தாகி விட்டது.சீடர்கள், தங்கள் மனதிற்குள், “நம் குருவுக்கு பைத்தியம் பிடித்து விட்டது போலும்! உணவே இல்லாமல் வெறும் தட்டு முன்முதியோர்கள் அமர்ந்தால், அவர்கள் ஏமாந்து போவார்கள் என்பது கூட இவருக்கு தெரியாதா...” என்று தங்களுக்குள் சொல்லிக் கொண்டனர்.நேரம் கடந்தது. சீடன் ஒருவன் குருவிடம், “இப்போது என்ன செய்வது?” என்றான்.“கவலை வேண்டாம். உணவு அளிப்பது கடவுளின் பொறுப்பு. எல்லாரையும்  அமரச் சொல்லுங்கள்” என்றார்.என்ன நடக்கப்போகிறதோ என எல்லாரும் திகைத்து நிற்க, குரு மனஒருமையுடன் கடவுளைப் பிரார்த்தித்தார். அப்போது, வாசலுக்கு வாகனம் ஒன்று வந்தது. அதில் தேவைக்கு நிறைய உணவும் இருந்தது.அந்த வண்டியை ஓட்டி வந்தவர் குருவிடம்,“குருவே! எங்கள் முதலாளி இந்த விருந்தை  உங்களிடம் அளிக்க உத்தரவிட்டுள்ளார்” என்றார்.நடந்த விஷயம் இது தான். பணக்காரரான அந்த முதலாளி, தன் நண்பர்களுக்கு விருந்து கொடுக்க ஏற்பாடு செய்துஇருந்தார். ஆனால், கடைசியில் நேரத்தில் ஏதோ காரணத்தால் விருந்து தடைபட்டதால், உணவை முதியோர்களுக்கு வழங்க முடிவெடுத்து அனுப்பி வைத்தார். “பெரிய முதலாளியான கடவுளின் உத்தரவால், இந்த உணவு கிடைத்துள்ளது. அவருக்கு நன்றி சொல்லி விருந்தை பரிமாறுவோம்,” என்று சீடர்களுக்கு உத்தரவிட்டார். எதிர்பார்த்ததை விட  விருந்து சிறப்பாக இருந்தது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மிக அழகானது - பழநி பெரிய ஆவுடையார் கோயில்தலை சாய்த்த கோலம் - திருவூறல், தக்கோலம் (வேலூர் மாவட்டம்)சிற்ப ... மேலும்
 
அரிதாக சில கோயில்களில் கால்களை மாற்றி மடக்கி வைத்தும், குத்துக்காலிட்ட நிலையிலும் காட்சி தரும் ... மேலும்
 
வலதுகை ஆட்காட்டி விரலின் நுனியும், கட்டைவிரலின் நுனியும் பொருந்தியிருக்க, நடுவிரல், மோதிரவிரல், ... மேலும்
 
தெட்சிணாமூர்த்தி யோகம், ஞானம் (மேதா), வீணா, வியாக்யான தெட்சிணாமூர்த்தி என நான்கு நிலைகளில் ... மேலும்
 
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar