* தர்ம வழியில் வாழ்வு நடத்தினால் ஒவ்வொரு நாளும் இனிய நாளாகவே இருக்கும். * துன்பம் என்பது இறைவனின் வரப்பிரசாதம். அது அவனது கருணைக்கு அடையாளம். * உங்கள் தேவைகளை நீங்களே பூர்த்தி செய்து கொள்ளுங்கள் உண்மையான துறவியால் தான் பணத்தின் மயக்கத்தை எதிர்த்து நிற்க முடியும். * ஆன்மிகத்தின் மூலமாகவே பழைய கர்ம வினைகளில் இருந்து விடுபட முடியும். * பணத்தாசை பிடித்த மனிதர்களை எப்போதும் நம்ப முடியாது. கடவுளின் திருவடியில் நம் ஆசைகள் அனைத்தையும் அர்ப்பணித்து விடுவதே நல்லது. நமக்கு எது தேவையோ அதை அவர் கொடுக்கட்டும். *தூய்மையான மனம் உடையவர்கள் கண்ணுக்கு அனைத்தும் தூய்மையாகவே தெரியும். * ஒருவன் தியானத்தில் வெற்றி பெறும் பொழுது அனைத்திலும் வெற்றி பெறுகிறான். * தியானத்தில் மனம் நிலைத்து விட்ட பிறகு யாருடனும் பேசிப் பழகலாம். அதனால் மனதிற்கு ஒரு குறையும் உண்டாகாது. * தினமும் பிரார்த்தனை செய்யும் வழக்கமுடையவர்கள் துன்பத்திலிருந்து விடுபடுவர்.