திண்டுக்கல்: கேரளாவில் இயல்பு நிலை திரும்ப திண்டுக்கல் அடியனுாத்து கிராமத்தில் பூவாடை காளியம்மன் கோயிலில் பூஜாரிகள் பேரமைப்பு சார்பில் சிறப்பு பவுர்ணமி பூஜை நடந்தது. மாவட்ட தலைவர் உதயகுமார் சிவாச்சாரியார் தலைமை வகித்தார். வெள்ளத்தால் உயிரிழந்த மக்களுக்கு மோட்சதீபம் ஏற்றினர். கோயில் நிர்வாகிகள், பேரமைப்பின் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பூசாரி பிச்சை செய்திருந்தார்.