மயிலம் : திருவக்கரையில் ஐப்பசி மாத பவுர்ணமி ஜோதி தரிசனம் நடந்தது.திருவக்கரையில் ஐப்பசி மாத பவுர்ணமி ஜோதி தரிசன விழாவை முன்னிட்டு நேற்று (அக்., 23ல்) காலை 6:00 மணிக்கு சந்திரமவுலீஸ்வரர், வக்கிரகாளியம்மனுக்கு அபிஷேகம் வழிபாடு நடந்தது.காலை 8:00 மணிக்கு வக்கிரகாளியம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
மாலை 6:00 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர், சந்திரமவுலீஸ்வரர், வக்கிரகாளி, குண்டலிமா முனிவர், வரதராஜபெருமாள், வள்ளி, தெய்வானை சுப்ரமணியர், வக்கிரசனி ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் மகா தீபாரதனை நடந்தது. இரவு 12 மணிக்கு பவுர்ணமி ஜோதி காண்பித்தனர்.