மலைக்கு கிளம்பும் போது, வீட்டையோ, மனைவி, குழந்தைகளையோ, பெற்றோரையோ திரும்பி திரும்பிப் பார்க்காமல் செல்வது அவசியம். பக்தர்கள் தங்களின் ஆன்மாவை கடவுளிடம் சமர்ப்பிக்க வேண்டும். சுவாமி ஐயப்பனின் திருவடியில் மனம் முழுமையாக ஒன்றுபட வேண்டும் என்பதன் அடிப்படையில், இந்த நடைமுறை பக்தர்களால் பின்பற்றப்படுகிறது.