திருப்போரூரில் கந்தசுவாமி கோவிலில், கிருத்திகை குவிந்தனர் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24நவ 2018 04:11
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், கார்த்திகை கிருத்திகை விழாவில் பக்தர்கள் குவிந்தனர்.திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், மாதந்தோறும் கிருத்திகை விழா கொண்டாடப் படுகிறது. அந்த வகையில் பிரதான கிருத்திகையில் ஒன்றான, கார்த்திகை விழா நேற்று (நவம்., 23ல்) நடைபெற்றது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள், சரவண பொய்கை குளத்தில் நீராடி, அர்ச்சனை செய்து கந்தனை வழிபட்டனர்.விழாவை ஒட்டி, நேற்று முன்தினம் (நவம்., 22ல்) மாலை, மூலவர், கந்த பெருமானு க்கு மஹா அபிஷேகம் நடைபெற்றது. தங்க கவசத்தில் மூலவர், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.