பதிவு செய்த நாள்
04
ஜன
2019
02:01
திருக்கோவிலூர்:திருக்கோவிலூர், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது.
திருக்கோவிலூர், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, மாலை 6:00 மணிக்கு, அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, மகாபைரவர் ஆவாகனம், மகாபைரவர் பூஜை, மகாபைரவர் ஹோமம், 64 மகாபைரவர் ஆகுதி, பூர்ணாகுதி முடிந்து கடம் புறப்பாடாகி ஸ்தல மூர்த்தியாக விளங்கும் அந்தகாசூர சம்கார மகாபைரவருக்கு அபிஷேகம், அலங்காரம், சோடசோபவுபச்சார தீபாராதனை நடந்தது.