Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அனுமனை எவ்வாறு வழிபட வேண்டும்? அனுமனுக்கு வெற்றிலை மாலை ஏன்? அனுமனுக்கு வெற்றிலை மாலை ஏன்?
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆண்டிபட்டி அருகே 15ம் நூற்றாண்டு நாயக்கர் கால சதிக்கல் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
ஆண்டிபட்டி அருகே 15ம் நூற்றாண்டு நாயக்கர் கால சதிக்கல் கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

04 ஜன
2019
03:01

போடி: தேனி மாவட்டம் போடி சி.பி.ஏ., கல்லூரி வரலாற்றுத்துறை ஆய்வில், ஆண்டிபட்டி அருகே பிச்சம்படடியில் ஊர் நாயக்கர் காலத்து 15, 16ம் நூற்றாண்டின் சதிக்கல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

கல்லூரி வரலாற்றுத் துறை உதவி பேராசிரியர் மாணிக்கராஜ் கூறியதாவது:
ஆண்டிபட்டி அருகே பிச்சம்பட்டி கிராமத்தில் மண்ணில் புதைந்த நிலையில் நாயக்கர் காலத்தை சேர்ந்த சதிக்கல் கண்டுபிடிக்கப்பட்டது.மூன்றடி உயரம், இரண்டரை அடி அகல முடைய கல்லில் வீரன் ஒருவன் பீடத்தில் வலக்காலை இடப்பக்கமாக மடக்கியும், இடக்காலை தொங்கவிட்டு, சுகாசன அமர்வுக் கோல நிலையில் புடைப்பு சிற்பமாக
செதுக்கப்பட்டுள்ளது. வீரனின் வலக்கையில் கட்டாரி எனும் ஆயுதம் உள்ளது.

அர்த்த சந்திர ஹஸ்தம் முத்திரையுள்ள இடது கையில் மலர்மொட்டு  போன்ற பொருள் உள்ளது. வீரனுக்கு வலப்பக்க கொண்டையும், காதுகளில் பத்ரகுண்டலம், கழுத்தில் சரப்பளி, அம்புச்சரம், மணிமாலை போன்ற ஆபரணங்கள் உள்ளன.

மேலும் இரண்டு கை புஜங்களிலும் இரண்டுக்குடைய கடகவளை காணப்படுகிறது. நாயக்கர் காலத்தை சார்ந்த சிற்பங்களில் வடிவமைக்கப்படும் சுருள் சுருளான அமைப்புடைய பட்டாடை அமைப்பு இவ்வீரனுக்கு இடைமுதல் கால்வரையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இடைச் சுற்றி அரைஞாண் எனும் ஒட்டியாணம் உள்ளது.

வீரனுக்கு வலப்பக்கம் மனைவி சமபங்கு நிலையில் நின்றுள்ளபடி புடைப்பு சிற்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளார். வலக்கையை முன்பக்கம் மடக்கி கடக ஹஸ்தம் முத்திரையில் மலர் மொட்டும், அர்ந்த சந்திர ஹஸ்தம் அமைதியில் உள்ள இடக்கையில் உருண்டையான பொருளும் பிடித்தபடி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இப்பெண் தன்  கணவன் இறந்த
பின் சதி எனும் உடன்கட்டை ஏறியதை அடையாளப்படுத்தும் விதமான சிற்பமாக காட்டப் பட்டுள்ளது. வீரனுக்கு இடப்பக்கம் நின்றுள்ள பணிப்பெண் வலது கையால் சாமரம் வீசுவது போன்றும், இடக்கையில் நீர்குவாளை அல்லது மதுக்குடம் பிடித்த நிலையில் சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளது.

இப்பெண்களுக்கும் குந்தளம் கொண்டை, காதுகளில் பத்ரகுண்டலம், கழுத்தில் சரப்பளி, அரும்புச்சரம், மணிமாலை, கைகளில் கடகவளை போன்ற ஆபரணங்கள் உள்ளன.

வீரன் மற்றும் மனைவியின் செயல்பாடுகளை கவுரவிக்கும் வகையில் குடைபிடித்து, பின்னர் சிவலோகம் அழைத்து செல்லும் அடையாளமாக குடை கட்டப்பட்டிருக்கிறது. சிவலோகம் சென்றடைந்ததை வெளிக்காட்டும் வகையில் சூரியன், சந்திரன், உருவங்கள் கல்லில் மேல்
பகுதியில் அடையாளப் படுத்தப்பட்டுள்ளது. நாயக்கர் ஆட்சிக்கு உட்பட்ட இப்பகுதியில் சதி எனும் உடன்கட்டை ஏறும் பழக்கம் நடைமுறையில் இருந்துள்ளதை வெளிக்காட்டும் வகையில் இச்சதிக்கல்லில் சான்றாக அமைந்துள்ளது. இது 15, 16ம் நூற்றாண்டை சார்ந்ததாக
கருதப்படுகிறது. என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அரங்கநாத ஸ்வாமி திருக்கோவிலில் ஆடி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு இன்று அதிகாலை ... மேலும்
 
temple news
ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. விஷ்ணுவின் அம்சமாகத் தோன்றிய சக்தியே ஏகாதசி. ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் கோயிலில் வெளிஆண்டாள் சந்நிதி உள்ளது. இங்கு ஆண்டாள் அமர்ந்த கோலத்தில் காட்சி ... மேலும்
 
temple news
கோவை; கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருமங்கலம்; கள்ளிக்குடி தாலுகா செங்கப்படை கோயிலில் 68 ஆண்டுகளாக அணையாமல் தொடர்ந்து விளக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar