பதிவு செய்த நாள்
25
ஜன
2019
02:01
நத்தம்: நத்தம் கைலாசநாதர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
பால், இளநீர், பன்னீர், மஞ்சள்நீர், தயிர், விபூதி, சந்தனம், புஷ்பம், திருமஞ்சனம் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் நடந்தது. பின், சுவாமிக்கு அலங்காரம், பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல் திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் உள்ள விநாயகருக்கும் அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தது.