Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஓசூரம்மன் கோவிலில் திருத்தேர் ... சந்திரசூடேஸ்வரர் சிம்ம வாகன உற்சவம்: திரளான பக்தர்கள் தரிசனம் சந்திரசூடேஸ்வரர் சிம்ம வாகன ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புல்லாணியில் பாண்டியர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
திருப்புல்லாணியில் பாண்டியர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

16 மார்
2019
11:03

ராமநாதபுரம்: திருப்புல்லாணி அரசுப் பள்ளி மாணவர்களால் ஆதிஜெகநாதர் கோயிலில் புதைந்திருந்த 13ம் நுாற்றாண்டு பாண்டியர்கள் கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. திருப்புல்லாணி ஆதி ஜெகநாதப்பெருமாள் கோயிலில் உள்ள பட்டாபி ேஷக ராமர் சன்னதி யின் தெற்கு வெளிப்புற சுவர், மூன்றாம் பிரகாரம் ஆகிய இடங்களில் சுவரின் அடிப்பகுதியில் புதைந்த நிலையில் கல்வெட்டுக்கள் இருந்ததை திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தை சேர்ந்த மாணவர்கள் கண்டுபிடித்தனர்.

இவை கி.பி., 13 ம் நுாற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கால கல்வெட்டுக்கள் ஆகும். இதுகுறித்து ராமநாதபுரம் தொன்மை பாதுகாப்பு மன்றங்களின் ஒருங்கிணைப்பாளர் வே.ராஜகுரு கூறியதாவது: இவை துண்டு கல்வெட்டுக்கள். ஒன்று கோனோரி மேல்கொண்டான் எனும் அரசாணைக்கல்வெட்டு. மூன்று கல்வெட்டுக்களில் உலகமுழுதுமுடையார் என்பவர் பெயர் உள்ளது. வீரபாண்டியன் சந்தி, சதயத்திருநாள், தேவதானம், ஆகியவற்றிற்காக நிலங்களை கோயிலுக்கு தானமாக வழங்கியுள்ளார். திருப்புல்லாணி கோயிலில் வீரபாண்டியன் சந்தி எனும் ஒரு பூஜைக்கட்டளையை உருவாக்கி அதற்கு உலகு சிந்தாமணி வளநாட்டு அமுதகுணமங்கலம் என்ற ஊரை தானமாக கொடுத்துள்ளார். உலகு சிந்தாமணி வளநாடு என்பது சாயல்குடி அருகிலுள்ள திருமாலுகந்தான் கோட்டை. இக்கோயிலில் சதயத்திருநாள் கொண்டாட வேண்டிய திருப்படி மாற்று உள்ளிட்ட பொருட்களாக நீர் சூழ்ந்த நிலமும் கருங்செய்யும் நீக்கி மீதமுள்ள நிலத்தை இவர் தானமாக வழங்கியது கல்வெட்டில் உள்ளது.

உலகமுழுதுமுடையார் என்பவர் கி.பி., 1253 முதல் 1283 வரை ஆண்ட முதலாம் சடைய வர்மன் வீரபாண்டியன் பட்டத்தரசி ஆவார் . மன்னன் நலமாக வாழ அவன் பெயரில் ஒரு சந்தியும், அவன் சதய நட்சத்திரத்தில் பிறந்தவன் என்பதால் அதை சதய திருநாளாக கொண்டாட தானங்களை இக்கோயிலுக்கு வழங்கியுள்ளார்.  இதில் உள்ள கல்வெட்டுக்கள் முதலாம் சடையவர்மன் வீரபாண்டியன் காலத்தை சேர்ந்தது, என்பது உறுதியாகிறது, என்றார். வேளானுார் அரசுப்பள்ளி கணித ஆசிரியர் கு.முனியசாமி, ராமநாதபுரம் சாந்தக்குமார், திருப்புல்லாணி தொன்மை பாதுகாப்பு மன்றத்தை சேர்ந்த மு.விசாலி, ச.பிரவீணா, து.மனோஜ், ஜெ.தர்ஷினி ஆகியோர் கல்வெட்டு கண்டுபிடித்து நகலெடுத்து பதிவு செய்துள்ளனர்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கோவிலூர்; மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் திருவண்ணாமலை, அபிதகுஜாம்பாள் சமேத அண்ணாமலையாருக்கு ... மேலும்
 
temple news
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த தை அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி; கன்னட இசையின் முன்னோடியான புரந்தர தாசரின் மூன்று நாள் ஆராதனைப் பெருவிழா, திருமலை திருப்பதி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழாவிற்கான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவிளையாட்டம் அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் மாணிக்கவாசகர்  உலோக சிலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar