Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! காளியம்மன் கோவில் தீர்த்த ஊர்வலம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீரசின்னம்மாள் கோயிலில் வரும் 5ம் தேதி மாசித் திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மார்
2012
11:03

எட்டயபுரம் : எட்டயபுரம் அருகே சுரைக்காய்பட்டி கிராமத்தில் இலந்தைமுள் கோட்டை வீரசின்னம்மாள் கோயில் மாசித்திருவிழா வரும் 5ம் தேதி நடக்கிறது. அதை முன்னிட்டு இலந்தை முள்ளால் ஆன கோட்டை கட்டும் பணி துவங்கியது. சுரைக்காய்பட்டி சில்லவார் குலராஜகம்பளத்தார் சமுதாயத்தினர் கடந்த மாதம் 15ல் ஊர் கூட்டம் போட்டு இலந்தை முள் கோட்டை வீரசின்னம்மாள் கோயில் மாசித்திருவிழா இந்தாண்டு நடத்துவது சம்பந்தமாக ஊர் கூடி முடிவு செய்யப்பட்டது. இதை முன்னிட்டு சுரைக்காய்பட்டி முன்னாள் பஞ்., தலைவர் நாகரத்தினம் தலைமையில் 108 பக்தர்கள் கடந்த 26ம் தேதி குருமலை, முடுக்கலாங்குளம் மலை, கண்மாய், காட்டுப்பகுதிகளில் ஐந்து டிராக்டர்களில் இலந்தை முள் லோடு ஏற்றி சுரைக்காய்பட்டி வந்தனர். கடந்த 27ம் தேதி சுமார் 100 அடி சுற்றளவு 25 அடி உயரம், 10 அடி அகலம் வட்ட வடிவமான கோயிலில் இலந்தை முள் கொண்டு கோட்டை கட்டும் பணி துவங்கி புதுப்பித்தனர். அன்று இரவு கோயிலின் முன்பு ஊர் கூடி அம்மனுக்கு பூஜைகள் நடத்தி அம்மன் அருள்வாக்கு உத்தரவு கேட்கப்பட்டது. இதன் பேரில் வரும் 5ம் தேதி இரவு மாசி பொங்கல் திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. வரும் 5ம் தேதி இரவு 9 மணியளவில் தேவதந்துமி ஆகிய மங்கள வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் தெய்வீக கலையான தேவராட்டம் ஆடிக்கொண்டே ஊர் மந்தையிலிருந்து புறப்பட்டு திருவீதி உலா வந்து கோயிலை வந்தடைவர். இரவு 11 மணிக்கு மேல் பூஜை துவங்கும். ஜக்கதேவியின் அவதாரமான வீரசின்னம்மாள் அம்மனுக்கு உருவ வழிபாடு கிடையாது. கோயிலின் மத்தியில் மண்பானையில் நிறைகுடம் தண்ணீர் வைத்து சித்தாடை கட்டி, காதோலை கறுகுமணி பாசி அணிவித்து அம்மனாக அலங்கரித்து தீபம் ஏற்றி பூஜைகள் நடக்கும். பூசாரி பிச்சைவேல் பூஜைகளை நடத்துவார். முதலில் ஊர் பொதுப்பொங்கல் வைக்கப்படும். அதையடுத்து வீடுதோறும் ஒரு பொங்கல் வீதம் வைத்து வழிபடுவார்கள். அன்று நள்ளிரவு 12 மணிக்கு மேல் குழந்தை வரம் நேர்த்திகை கடனாக கரும்பு தொட்டில் கட்டி அம்மனுக்கு நேர்ச்சை செலுத்தி வழிபடுவார்கள். ஏற்பாடுகளை சுரைக்காய்பட்டி சில்லவார் குலராஜகம்பளத்தார் சமுதாய விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் ஆவணி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ... மேலும்
 
temple news
சூரியனின் அருளைப் பெற ஆவணி ஞாயிறு விரதம் சிறப்பானதாகும். இது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் ... மேலும்
 
temple news
காரைக்கால்; திருநள்ளாறு உலகப்புகழ் பெற்ற சனீஸ்வர பகவான் கோவிலில் ஆவணி சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 
temple news
விழுப்புரம்; பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஆவணி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ... மேலும்
 
temple news
நாகப்பட்டினம்; நாகையில்,63 நாயன்மார்களில் ஒருவரான,அதிபத்த நாயனாருக்கு சிவபெருமான், தேவியருடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar