பதிவு செய்த நாள்
03
ஏப்
2019 
02:04
 
 குளித்தலை: பிரதோஷத்தையொட்டி, குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவிலில், நந்தீஸ் வரருக்கு, பால், தயிர், சந்தனம், விபூதி, தேன், இளநீர் உள்ளிட்ட பொருட்களால், சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. 
இதேபோல், அய்யர்மலை ரெத்தின கிரீஸ்வரர், சிவாயம் சிவபுரீஸ்வரர், பெரியபாலம் மீனாட்சி சுந்தரேசர், மேட்டுமருதூர் ஆராஅமுதீஸ்வரர் கோவில்களிலும், நந்தீஸ்வரருக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது. ஏராளமானோர் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.