ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் யுகாதி வருடபிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.வெள்ளிக்கிழமை குறடு மண்டபத்தில் எழுந்தருளிய ஆண்டாள், ரெங்கமன்னார், கருடாழ்வார், பெரிய பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் 12 ஆழ்வார்களுக்கு சிறப்பு பூஜைகளை முத்து பட்டர் செய்தார், இதன்பின் புத்தாடைகள் அணிவித்து பூஜைகள் நடந்தன. ஸ்தானிகம் முத்தா குட்டி புத்தாண்டு பஞ்சாங்கம் வசித்தார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.