நடுவீரப்பட்டு அருகே கற்பக விநாயகர், மகா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஜூலை 2019 02:07
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த பத்திரக்கோட்டை பட்டிக்குப்பம் கிராமத்தில் உள்ள கற்பக விநாயகர், கற்பக வள்ளியம்மன், பாலமுருகன் கோவிலுக்கு, வரும் 8ம் தேதி திங்கள்கிழமை மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.
விழாவை முன்னிட்டு நாளை 7 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணிக்கு அனுக்ஞை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமத்துடன் விழா துவங்குகிறது. அன்று மாலை 4:00 மணிக்கு வாஸ்து சாந்தி, அங்குரார்பணம் நடக்கிறது. இரவு 9:00 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜை நடக்கிறது. 8ம் தேதி திங்கள்கிழமை காலை 6:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை,கோ பூஜை நடக்கிறது. அதனை தொடர்ந்து இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடந்து 9:30 மணிக்கு மகா தீபாராதனை நடக்கிறது.10:00 மணிக்கு யாகசாலையில் உள்ள கலசங்கள் ஆலய உலாவாக வந்து 10:15 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இரவு 10:00 மணிக்கு அம்மன் வீதி உலா நடக்கிறது.