Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சேலத்தில் மழை வளம் பெருக சிறப்பு ... சேலத்தில், கோட்டை மாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீரபாண்டி கரபுரநாதர் கோவிலில் நடராஜருக்கு ஆனி திருமஞ்சனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2019
02:07

வீரபாண்டி: கரபுரநாதர் கோவிலில், ஆனி திருமஞ்சனத்தையொட்டி சிவகாமி  சமேத நடராஜ ருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. சேலம், உத்தமசோழபுரம்  கரபுரநாதர் கோவிலில் நடராஜருக்கு சித்திரையில் திருவோணம், ஆனி உத்திரம்,  ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, மாசி சதுர்த்தசி மற்றும் மார்கழியில்  வரும் திருவாதிரை ஆகிய ஆறு நட்சத் திரங்களில், சிறப்பு அபிஷேகம்  செய்யப்படுகிறது.

இதில், ஆனி உத்திரம் நட்சத்திரத்தன்று நடக்கும் திருமஞ்சனத்துக்கு முதன்மையான இடமுண்டு. நல்ல மழை பொழியவும், உலக அமைதி வேண்டியும் நடத்தப்படுகிறது. சிதம் பரத்தில் மூலவராக நடராஜர் உள்ளார். அங்கு பஞ்சலோக சிலைதான் உள்ளது. கரபுரநாதர் கோவில் நடராஜர் மூலவர் கற்சிலையாகவும், உற்சவர் பஞ்சலோக சிலையாகவும் உள்ளது தனிச்சிறப்பு. நேற்று (ஜூலை., 8ல்) காலை, 11:00 மணிக்கு சிவகாமி சமேத நடராஜருக்கு பால், தயிர், கரும்புச்சாறு, பானகம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப் பட்டது.

ஆடல் வல்லான் நடராஜருக்கும், சிவகாமசுந்தரிக்கும் சர்வ அலங்காரம் செய்து, பூஜை நடத்தப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

* பனமரத்துப்பட்டி அருகே, நத்தமேடு சிதம்பரேஸ்வரர் கோவிலில், ஆனி  திருமஞ்சன விழா, நேற்று (ஜூலை., 8ல்) நடந்தது. அதிகாலை நடராசர், சிவகாமி அம்பாள் உற்சவர் சிலைக்கு, பஞ்சாமிர்தம், பால், தயிர், பழச்சாறு உள்ளிட்ட, 16 வகையான அபிஷேகம் செய்யப்பட்டது. அடுத்து, சிவகாமி, சிதம்பரேஸ்வரர் சிறப்பு  அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பெண்கள் பங்கேற்ற  திருமாங்கல்யம் பூஜை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை ; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தேய்பிறை பிரதோஷத்தை  முன்னிட்டு, பெரிய நந்திய ... மேலும்
 
temple news
நத்தம், நத்தம் கோவில்பட்டியில் உள்ள கைலாசநாதர் கோயிலில் புரட்டாசி மாத பிரதோஷ பூஜைகள் நடந்தது.இதில் ... மேலும்
 
temple news
நாகர்கோவில்; நாளை பத்மனாபபுரத்தில் இருந்து புறப்படும் நவராத்திரி பவனிக்காக சுசீந்திரத்தில் இருந்து ... மேலும்
 
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவிலில், இந்தாண்டு நவராத்திரி விழா 3ம் தேதி துவங்கி அக்., 12ம் தேதி வரை நடக்கிறது. ... மேலும்
 
temple news
கோவை; கோவை ஆர். எஸ். புரம் சொக்கம்புதூர் ரோடு ஸ்ரீ கிருஷ்ணாபுரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar