பதிவு செய்த நாள்
11
ஜூலை
2019
11:07
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பொது மக்கள் அத்திவரதரை தரிசிக்கும் நேரம் இன்று, நாளை (ஜூலை., 11, 12ல்) குறைக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள்கோவில் இன்று (ஜூலை., 11), ஆனி கருட சேவை நடைபெறு கிறது. இதனைமுன்னிட்டு இன்று (ஜூலை., 11), மாலை 5 மணி வரை மட்டுமே அத்திவரதரை தரிசிக்க பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி வருகை
அத்திவரதரை தரிசிக்க ஜனாதபதி ராம்நாத் கோவிந்த் நாளை (ஜூலை., 12), காஞ்சிபுரம் வர உள்ளார். இதனை முன்னிட்டு நாளை பகல் ஒரு மணி முதல் மாலை 5 மணி வரையில் பொதுமக்கள் அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. கடந்த 10 நாட்களில் அத்திவரதரை 11 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் ஆனி கருடசேவை இன்று (ஜூலை., 11), நடைபெறுவதால் மாலை 5:00 மணி வரை மட்டுமே அத்தி வரதரை தரிசிக்க முடியும் எனவும் அறிவித்துள்ளது. இதற்கிடையே முக்கிய ஸ்தர் விரைந்து தரிசனம் செய்ய வழங்கப்படும் ’டோனர் பாஸ்’ எனும் சிறப்பு அனுமதி அட்டையை சிலர் போலியாக தயாரித்து கோவிலுக்குள் நுழைவதாக புகார் எழுந்துள்ளது.