பதிவு செய்த நாள்
11
ஜூலை
2019
12:07
சிவகங்கை:சிவகங்கை பையூர் பிள்ளைவயல் காளியம்மன் கோயிலில் நாளை (ஜூலை., 12ல்) பூச்சொரிதல்நடக்கிறது.
இக்கோயிலில் ஜூலை 5ம் தேதி காலை 9:15 மணிக்கு மேல் 10:15 மணிக்குள் கொடியேற்றத் துடன் விழா துவங்கியது.அன்று மாலை அம்மன் சன்னதியிலிருந்து புறப்பட்டு தெப்பக்குளம் சென்று பூக்கரகம் கட்டி பூக்கரகத்துடன் பக்தர்கள் தீச்சட்டி எடுத்து வந்து அம்மன் சன்னதி முன் பூக்குழி இறங்கினர்.தினமும்மாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக வழிபாடு நடந்தது. நாளை (ஜூலை., 12ல்)காலை 10:30 மணிக்கு மேல் 12:00 மணிக்குள் அம்மனுக்கு சிறப்பு பாலபிஷேகம், அலங்காரம், நெய்வேத்தியங்களும் நடக்கும். மாலை 4:00 மணிக்கு சந்தனக் காப்பு அலங்காரத்துடன் அன்னை பிள்ளைவயல் காளியம்மன் குழந்தையுடன் அருள் பாலிப் பார். தொடர்ந்து பூச் சொரிதல் விழா நடக்கும். விழாவை முன்னிட்டு பொங்கல் வைத்தல், மா விளக்கு ஏற்றுதல், பிள்ளை தொட்டி கட்டுதல், முடி இறக்குதல், போன்ற வேண்டுதல்நடந்து வருகிறது.
*சிவகங்கை நேருபஜார் குழந்தாபுரி எனும் வீரமாகாளிஅம்மன் கோயில் பூக்கரக பூச்சொரிதல் விழாவையொட்டி நாளை (ஜூலை., 12ல்) காலை பூச்சொரிதல் விழா நடக்கிறது.ஜூலை 9ம் தேதி பால்குடம் எடுத்தல், பாலபிஷேகம் நடந்தது.இக் கோயிலில் கடந்த 25ம் தேதி கணபதி ஹோமம், கொடியேற்றத்துடன் விழா துவங்கியது.வரும் 9ம் தேதி பால்குடமும், மாலை 6:00 மணிக்கு அம்மனுக்கு பூக்கரகம், அக்னி சட்டி எடுத்து நகர் வலம் வந்து பூக்குழி இறங்குதல் நடந்தது. நாளை (ஜூலை., 12ல்) காலைபூச்சொரிதல் விழாவும், இரவு 8:00 மணிக்கு வீரகாளி அம்மன் வீதியுலா வருதலும், இரவு 10:00 மணிக்கு வள்ளி திருமணம் நாடகமும்நடக்கிறது. ஏற்பாடு களை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.