Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி மற்றும் ஸ்ரீரங்கம் கோயிலில் ... கொல்லங்கோடு தூக்க நேர்ச்சை திருவிழா! கொல்லங்கோடு தூக்க நேர்ச்சை திருவிழா!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பட்ஜெட்: 1006 கோவில்களுக்கு குடமுழுக்கு, நாள் முழுவதும் அன்னதானம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

27 மார்
2012
11:03

பழநி மற்றும் ஸ்ரீரங்கத்தில், நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்பட உள்ளது. கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் 1,006 கோவில்களுக்கு, குடமுழுக்கு நடத்தப்படுகிறது.

நிதி ஒரு விஷயமா? இதற்கான நிதி குறித்து துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது: உபயதாரர்கள், கடந்த முறை குடமுழுக்குக்கு நிதி அளித்தவர்கள், ஊரில் உள்ள வி.ஐ.பி.,க்கள் ஆகியோரை அணுகினாலேயே, நிதி கிடைத்துவிடும். அப்படியும் கிடைக்காதவற்றுக்கு, அறநிலையத் துறையில், பொது நிதி உள்ளது. புராதன கோவில்களாக இருந்தால், சுற்றுலா துறை நிதியைப் பயன்படுத்துவோம். இவ்வாறு, மொத்தம் 13 வகையான நிதியமைப்புகள், கோவில்களுக்கு உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர். தவறாக வகை மாற்றம் செய்யப்பட்ட மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் சொத்துக்களை மீட்பதற்கு, முயற்சி எடுக்கப்பட்டு வருகின்றன என, பட்ஜெட்டில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், எவ்வளவு நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது; எவ்வளவு மீட்கப்பட்டுள்ளது; அதற்கு என்ன முயற்சி எடுக்கப்பட்டது என்ற விவரங்கள் இல்லை.

கூடுதலாக 50 கோவில்கள்: ஏற்கனவே, 468 கோவில்களில் செயல்பட்டு வரும் அன்னதானத் திட்டம், மேலும் 50 கோவில்களுக்கு, இந்த ஆண்டு முதல் விரிவுபடுத்தப் படுகிறது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ள கோவில் சமையல் கூடங்களும், நவீனப்படுத்தப்பட உள்ளன. ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவில், பழநி தண்டாயுதபாணி கோவிலில், காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை, நாள் முழுவதும் அன்னதானம் அளிக்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்தக் கோவில்களில் ஏற்கனவே, பல்வேறு அடிப்படை வசதிகள் உள்ளன. திட்டம் துவக்கப்படும்போது, இரு கோவில்களிலும் சேர்த்து, நாள் முழுவதும், 6,000 பேர் உணவருந்துவர் என எதிர்பார்க்கப் படுகிறது. இதற்கான சமையலர்கள், உதவியாளர்கள் நிரந்தரமாக நியமிக்கப்பட வேண்டி இருக்கும். வழக்கமான அன்னதானத் திட்டத்துக்கு, தினக்கூலி அடிப்படையில் ஊழியர்கள் உள்ளனர்.

என்று துவக்கம்? இலக்கியங்களில் உள்ள நற்பண்பு, நீதிநெறி கருத்துகளை, கதைகள் வாயிலாக குழந்தைகளின் மனதில் ஆழப்படுத்த, சனிக்கிழமை தோறும் முக்கிய கோவில்களில், வகுப்புகள் நடத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். வகுப்புகளின்போது சிற்றுண்டியும், சிறந்த மாணவ, மாணவியருக்கு பரிசுகளும் அளிக்கப்படும். மேற்கண்ட இரு திட்டங்களும், முதல்வர் ஜெயலலிதாவிடம் தேதி பெற்றுத் துவக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* பழநியில், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய, கம்பிவட சீருந்து (வின்ச்) வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.

* அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு, கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 560 மடிக் கணினிகளை, "வீடியோ கான்பரன்சிங் மூலம், முதல்வர் ஜெயலலிதா இன்று வழங்குகிறார்.

- ஆர். ரங்கராஜ் பாண்டே -

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம் கடந்த டிசம்பர் மாதம் விமர்சியாக நடைபெற்றது. நீண்ட ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் தைப்பூசம் ஜன.26ல் பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்க ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருநாங்கூரில் 11 தங்க கருட சேவை உற்சவம்- 11 பெருமாளும் ஒரே இடத்தில் எழுந்தருள பக்தர்கள் ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை; ஆலங்குடியில் இரண்டாவது குரு ஸ்தலமாக திகழும்  தர்மசம்வர்தினி அம்பாள் சமேத ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் அமாவாசை நாளில் போலி புரோகிதர்கள் உலா வருவதால், பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar