பதிவு செய்த நாள்
26
அக்
2019
12:10
பழநி : பழநி சிவன் கோயில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு, அபிஷேகம், பூஜைகள் நடந்தது. பழநி பெரியாவுடையார் கோயிலில், பிரதோஷவேளையில் நந்திபகவான், மூலவருக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. சிவன் பார்வதி ரிஷபவாகனத்தில் உட்பிரகாரத்தில் வலம் வந்தனர். இடும்பன்கோயிலில் ரிஷபவாகனத்தில் உள்ள சிவகிரிநாதர், உமாமகேஸ்வரியம்மனுக்கு அபிஷேகம், அலங்காரத்தில், திருவுலா நடந்தது. மலைக்கோயில், பெரியநாயகியம்மன் கோயில், கைலாசநாதர், சன்னதிவீதி வேளீஸ்வரர் கோயில், நேதாஜிநகர் காமாட்சியம்மன் ஏகாம்பரேஸ்வரர் கோயில், புதுநகர் சிவன் கோயில்களில் அபிஷேகம், பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
கன்னிவாடி: தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவர், நந்திக்கு பால், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. விசஷே மலர் அலங்காரம் செய்யப்பட்டு, திருவாசக பாராயணத்துடன் பூஜைகள் நடந்தது. விழாவில் அன்னதானம், ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. சித்தையன்கோட்டை காசிவிசுவநாதர் கோயில், சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், வெல்லம்பட்டி மாரிமுத்துசுவாமி கோயில், பித்தளைப்பட்டி அண்ணாமலையார் கோயிலிலும் நடந்த அபிஷேக, ஆராதனைகளில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.