Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாசித்திருவிழா கொடியேற்றம்! திருச்செந்தூர் முருகன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடலுக்குள் கிடக்கும் சுவாமி சிலைகள்!
எழுத்தின் அளவு:
கடலுக்குள் கிடக்கும் சுவாமி சிலைகள்!

பதிவு செய்த நாள்

23 பிப்
2015
01:02

சேதுக்கரை: ராமநாதபுரம் சேதுக்கரையில் உள்ள சேது பந்தன ஜெயவீர ஆஞ்சநேயர் கோயில் எதிரே கடலுக்குள் பக்தர்கள் புனித நீராடும் இடத்தின் அருகில் ஏராளமான சுவாமி சிலைகள் நின்ற நிலையிலும், சாய்ந்த நிலைகளிலும் நுõறு அடி துõரத்தில் அடுத்தடுத்து புதைந்து கிடக்கின்றன. இங்கு கிடந்த ஒரு ஆஞ்சநேயர் சிலையை வெளியூர் பக்தர்கள் கடற்கரை அருகிலேயே நிறுவி, வழிபட்டுச் சென்றனர். இதை இங்கு வரும் பக்தர்களும் தவறாமல் வழிபடுகின்றனர். கடந்த 200 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் புனித நீராடிய பக்தர்கள் காலில் தட்டுப்பட்ட ஜெயவீர ஆஞ்சநேயர் சிலை தான் கடற் கரையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

சேதுக்கரை செல்லும் வழியில் உள்ள புதுக்குடியிருப்பு ஆற்று பகுதியிலும் ஏராளமான சிலைகள் கிடக்கின்றன. சேதுக்கரை அருகே கோரைக்குட்டம் கிராமத்தில் உள்ள கொட்டகுடி ஆற்றுப் படுகையில், தலை முதல் இடுப்பு பகுதி வரை சேதமுற்ற நிலையில் சமண மதத்தை தோற்றுவித்த மகாவீரர் (தீர்த்தங்கரர்) சிலை ஒன்று கடலுக்குள் மூழ்கி கிடக்கிறது. 3 அடி உயரத்தில் கால்களை மடக்கி மகாவீரர் யோகாசன நிலையில் அமர்ந்திருப்பது போல் அச்சிலை உள்ளது. அதன் முன் மற்றும் பின்பக்கத்தில் அழிந்த நிலையில் பிராமி எழுத்துக்கள் உள்ளன. அச்சிலை சேதுக் கரைக்கு எப்படி வந்தது என்ற விவரம் யாருக்கும் தெரிய வில்லை.

இதுகுறித்து தொன்மை பாதுகாப்பு மன்ற பொறுப்பாளர் ஆசிரியர் வே.ராஜகுரு கூறுகையில், ராமநாதபுரம் சேதுபதி மன்னர்கள் காலத்தில் அனுமந்தக்குடி என்ற ஊரில் வாழ்ந்த சமணர்கள் பற்றிய குறிப்பு அங்குள்ள செப்பேட்டில் உள்ளது. பெரியபட்டினம் கடல் பகுதியில் தொல்லியல்துறைக்கு சில சிற்பங்களும் செம்பு பொருட்களும் சமண மற்றும் புத்த மத தடயங்களாக கிடைத்துள்ளது. பின்னாளில், முழு வடிவம் பெறாத சிலைகளை வழிபடுவது ஆகம விதிப்படி நல்லதல்ல; அவற்றை நீர்நிலைகளில் இடுவது மரபாக வந்ததால், உடைந்த மகாவீரர் சிலையும் சேதுக்கரை கடலில் விடப்பட்டிருக்க வேண்டும். இச்சிலையை கைப்பற்றி தொல்லியல் துறை ஆய்வு நடத்தினால், இன்னும் பல அரிய தகவல்களை நாம் பெறலாம், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி  ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து மூன்றாம் நாளான இன்று  நம்பெருமாள் சவுரிகொண்டை ... மேலும்
 
temple news
கோவை: கோவை ராம் நகர் கோதண்ட ராமசாமி கோவிலில் மகா ருத்ர யக்ஞம் நிகழ்ச்சி நடந்தது. இதில் முதல் நிகழ்வாக ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் மலைமேல் அனைத்து தரப்பினரும் செல்ல 20 நாட்களுக்குப் பின்பு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; ஸ்ரீமடத்தில் இன்று காலை மகராயண புண்ய காலத்தை முன்னிட்டு சூரிய பூஜை நடைபெற்றது. காஞ்சி ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில், மார்கழி ஆருத்ரா தரிசன விழா வரும், 25 ம் தேதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar