Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவை கோதண்டராமசாமி கோவிலில் மகா ...  காரமடை அரங்கநாதர் கோயிலில் பகல் பத்து உற்சவம் துவங்கியது காரமடை அரங்கநாதர் கோயிலில் பகல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
 ஏ.ஐ., வந்தாலும் பக்தி தான் முக்கியம் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆசியுரை
எழுத்தின் அளவு:
 ஏ.ஐ., வந்தாலும் பக்தி தான் முக்கியம் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆசியுரை

பதிவு செய்த நாள்

22 டிச
2025
10:12

காஞ்சிபுரம்: “கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் வளர்ந்தாலும், ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு வந்தாலும், நம் பக்தி தான் நமக்கு முக்கியம். பக்தி இருந்தால் தான், நாம் அனைத்து தொழிலையும் செய்ய முடியும்,” என, காஞ்சி சங்கர மடத்தின் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆசியுரை வழங்கினார்.


‘திருமுறை திருவிழா’ எனப்படும் மூன்று நாட்கள் ஆன்மிக பெருவிழா, காஞ்சிபுரத்தில் கடந்த 19ம் தேதி துவங்கியது. மூன்றாம் நாளான நேற்று நிறைவு விழா நடந்தது. நேற்று காலை சிவனடியார்கள், சிவபக்தர்கள் என, 508 பேர் பங்கேற்று சிவபூஜை செய்தனர். ஓதுவார்கள் திருமுறை பேழை வழிபாடு நடத்தினர். கலாசாரம் தருமை ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் தலைமையில், ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் திருக்கல்யாண வைபவம், வெகுவிமரிசையாக நடந்தது. 


திருமுறை நிறைவு விழாவில், காஞ்சி சங்கரமடம் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், பக்தர்களுக்கு வ ழங்கிய ஆசியுரை: ஆன்மிக உணர்வு இருந்தால் தான், எந்த வேலையையும் செய்ய முடியும். கோவில்களுக்கு வாரத்திற்கு ஒரு முறையாவது செல்ல வேண்டும். தினமும் சென்றால் விசேஷம். நாட்டை காக்க கலாசாரம் முக்கியம். பரம்பரை தழைக்க வேண்டுமென்றால் கல்யாணம் முக்கியம். இங்கு, சுவாமி திருக்கல்யாண உத்சவத்தை சிறப்பாக நடத்தினீர்கள். பனிப்பொழிவு இருந்தாலும், காலையிலேயே மக்கள் ஆர்வத்தோடு வந்தனர். மாவடி சேவை, பங்குனி உத்சவத்திற்கு வருவது போல் மக்கள் வந்ததை பார்க்க முடிந்தது. பல விதமான லிங்கங்கள் இங்கு வைத்திருந்தீர்கள்; முதலியார்கள் மட்டுமின்றி அனைத்து சமுதாயத்தினரும் இதில் இணைந்திருக்கின்றனர். நம் நாடு முன்னேற வேண்டும் என்றால், எத்தனை இயந்திரம் வந்தாலும், கைத்தொழில் நலிந்துவிடக் கூடாது. காஞ்சிபுரம் நகரம் புண்ணியஸ்தலமாக விளங்குகிறது.


நகரமைப்பு, நீர் மேலாண்மை போன்றவை முந்தைய காலத்திலேயே காஞ்சிபுரத்தில் இருந்தது. ஸ்ரீசக்கரம் அமைந்த ஊர் காஞ்சி புரம். அகண்ட பாரதத்தில், 51 சக்தி பீடங்கள் இருந்தன. இந்தியாவில் இப்போது 40 சக்தி பீடங்கள் உள்ளன. பாகிஸ்தானில், வங்கதேசத்தில் சில சக்தி பீடங்கள் உள்ளன. ஒத்துழைப்பு தேவை வங்க தேசத்தில் உள்ள டாக்காவுக்கு சென்ற ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், அங்குள்ள கோவிலில் சண்டி ஹோமம் நடத்தினார். அங்கு, சங்கராச்சாரியார் ‘கேட்’ என்ற நுழைவாயிலையும் திறந்து வைத்தார். சக்தி பெற, நாம் அனைவரும் சேர்ந்து பணிபுரிய வேண்டும். காஞ்சிபுரம் மேற்கு ராஜவீதியில், ஓராண்டுக்கு 80 நாட்கள் திருவிழா நடக்கிறது. வேறு எங்கும் இதுபோல் திருவிழாக்கள் நடப்பதில்லை. இவை மேலும் அதிகரிக்க, மக்களின் ஒத்துழைப்பு தேவை. திருப்பாவை, திருவெம்பாவை, பஜனை கோஷ்டிகள் ஆகியவற்றை நாம் ஊக்குவிக்க வேண்டும். கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் வளர்ந்தாலும், ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு வந்தாலும், நம் பக்தி தான் நமக்கு முக்கியம். பக்தி வந்தால் தான், நாம் அனைத்து தொழில்களையும் செய்ய முடியும். மனிதன், தெய்வம் இடையே பக்தி தான் இணைப்பு பாலமாக உள்ளது. இவ்வாறு அவர் ஆசியுரை வழங்கினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி  ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து நான்காம் நாளான இன்று  நம்பெருமாள் மஞ்சள் வண்ண ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு அவதுாத தத்த பீடத்தின் தலைவர் ஸ்ரீகணபதி சச்சிதானந்த சுவாமிகள், ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், கால்நடைகளை பாதுகாக்க உயிர்நீத்த வீரர்களுக்கு, ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஜன., 3ல் நடராஜர் ஆருத்ரா தரிசனத்தில் பக்தர்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை : பகவத்கீதையை ஒரு குறிப்பிட்ட மதத்திற்குள் அடக்கிவிட முடியாது. அது பாரத நாகரிகத்தின் ஒரு பகுதி. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar