பித்தளைப்பட்டியில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய ஐயப்ப பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22டிச 2025 10:12
சின்னாளபட்டி: பித்தளைப்பட்டியில் விரதமிருந்த ஐயப்ப பக்தர்கள், நேற்று பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். திண்டுக்கல் அருகே பித்தளைப்பட்டியில் ஐயப்ப பக்தர்கள் குழுவினர், ஆண்டுதோறும் மாலையணிந்து சபரிமலை செல்கின்றனர். நேற்று 17ம் ஆண்டு பூக்குழி இறங்குதல் விழா நடத்தினர். முன்னதாக நேற்று வரதராஜ பெருமாள் கோயில் மண்டபத்தில், அன்னதானம் நடந்தது. பின்னர் மகா காளியம்மன் கோயில் முன்பு அக்னி குண்டம் வளர்க்கப்பட்டது. பக்தர்கள் குழுவினர், கிராம கோவில்களில் ஊர்வலமாக வந்து அபிஷேக, ஆராதனைகள் நடத்தினர். சிறப்பு பூஜைகளுக்கு பின், வரிசையாக நின்றிருந்த 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர் பூக்குழி இறங்குதலை தொடர்ந்து, அன்னதானம் நடந்தது. நாளை (செவ்வாய்க்கிழமை), இருமுடி கட்டுதலுடன் சபரிமலை யாத்திரை துவங்குவர்.