எரியோடு : எரியோடு மறவபட்டியில் தென்னம்பட்டி சவடம்மன் கோயில் சார்ந்த மாலைக்கோயிலான தாத்தப்பன் கோயில் உள்ளது. இங்கு கடந்த மாதம் கும்பாபிஷேகம் நடந்தது. இதனையடுத்து நேற்று 48-ம் நாள் மண்டல பூஜை நடந்தது.கோயில் பங்காளிகள் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடுகள் நடத்தினர். சுற்றுவட்டார பகுதியினர் திரளாக பங்கேற்றனர். தாத்தப்பன் சுவாமி மாலைக்கோயில் நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.