புதுச்சேரி: எல்லபிள்ளைச்சாவடி சாரதாம்பாள் கோவிலில் இன்று 26ம் தேதி, சீதா கல்யாண மகோற்சவம் நடக்கிறது.எல்லப்பிள்ளைச்சாவடி சாரதாம்பாள் கோவிலில், கிருஷ்ண பிரேமிகா பஜனை மண்டலி சார்பில், கடந்த 20ம் தேதி முதல் தினந்தோறும் இரவு 7:00 மணி முதல் 9:00 மணி வரை, பரனுார் ரங்கன்ஜி, ராம பக்த விஜயம் என்ற தலைப்பில் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றி வருகிறார்.சொற்பொழிவின் இறுதி நாளான இன்று, 26ம் தேதி காலை 9:00 மணி முதல் பகல் 12:30 மணி வரை சீதா கல்யாண மகோற்சவம் உஞ்சவிருத்தி, திவ்ய நாம பஜனை நடக்கிறது. இரவு 7:00 மணி முதல் 9:00 மணி வரை தியாகராஜர் எனும் தலைப்பில் ஆன்மீக சொற்பொழிவு நடக்கிறது.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கிருஷ்ண பிரேமிகா பஜனை மண்டலியினர் செய்து வருகின்றனர்.