பதிவு செய்த நாள்
26
ஜன
2020
03:01
குன்னூர்: குன்னூர் வெலிங்டன் பகுதியிலுள்ள டாக்டர் அம்பேத்கர் நகர் ஜகத் ஜனனி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா விமர்சையாக நடந்தது.
குன்னூர் வெலிங்டன் டாக்டர் அம்பேத்கர் நகர் பகுதியில் அமைந்துள்ள ஜகத் ஜனனி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் கருவறை, அர்த்த மண்டபம் முன் மண்டபம், புதிய செல்வ கணபதி, பாலமுருகன், வராஹி வைஷ்ணவி துர்க்கையம்மன் பிரதிஷ்டை செய்து கோவில் புதுப்பொலிவுடன் மாற்றப்பட்டது. நேற்று துவங்கிய கும்பாபிஷேக விழாவில் முதற்கால யாக பூஜை கணபதி பூஜை புண்ணியம் பஞ்சகவ்ய பூஜை வாஸ்து சாந்தி திரு சங்கர கணம் அங்குரார்ப்பணம் ரக்ஷாபந்தனம் கும்ப அலங்காரம் யாகசாலை பிரவேசம் துவார பூஜை அர்ச்சனை வேதிகா அர்ச்சனை பகுதி ஆகியவை நடந்தன தொடர்ந்து புனித நதியில் இருந்து தீர்த்தக்குளம் உழைப்பாளிகள் மேள தாளம் முழங்க ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.
தொடர்ந்து பாபா நா அபிஷேகம் செய்ய நாதி வாசம் கோபுர கலசம் வைத்தல் , எந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சார்த்துதல்ஆகியவை நடந்தன. இன்று இரண்டாம் கால வேள்வி விக்னேஸ்வர பூஜை பஞ்சகவ்ய பூஜை நாடி சந்தானம் , மஹா பூர்ணாகுதி, யாகசாலை பிரவேசம் நடந்தது. காலை 10 மணியளவில் கோபுரம், கணபதி, முருகன், வராஹி, வைஷ்ணவி, துர்க்கை மற்றும் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் மகா கும்பாபிஷேகம் நடந்தது . தொடர்ந்து மகா அபிஷேகம் தச தரிசனம், கோபூஜை , அலங்கார பூஜை, உள்ளிட்டவை நடந்தது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர், டாக்டர் அம்பேத்கர் நகர் கிராம மக்கள் செய்திருந்தனர்.