பதிவு செய்த நாள்
22
பிப்
2020
02:02
காஞ்சிபுரம்: திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோவிலில், கருட சேவை உற்சவம் நேற்று விமரிசையாக நடைபெற்றது.
காஞ்சிபுரம் அடுத்த, திருப்புட்குழி கிராமத்தில் உள்ளது, விஜயராகவ பெருமாள் கோவில். இக்கோவிலில், இந்தாண்டுக்கான பிரம்மோற்சவம், 19ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்வான கருட சேவை, நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. கோவிலின் வாகன மண்டபத்திலிருந்து, காலை, 8:00 மணிக்கு, கருட வாகனத்தில், சுவாமி புறப்பட்டார். அங்கிருந்து, பாலுச்செட்டிசத்திரம் பகுதியில் உள்ள பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின், மீண்டும் திருப்புட்குழி கிராமத்தில் வலம் வந்து அருள்பாலித்த பின், காலை, 11:30 மணிக்கு, வாகன மண்டபத்திற்கு சுவாமி வந்தடைந்தார். நேற்றிரவு, அனுமந்த வாகனத்தில் சுவாமி அருள்பாலித்தார்.