வில்லியனுார்:திருக்காஞ்சி மாசிமக தீர்த்தவாரி திருவிழா நேற்று ஐயனாரப்பன் மற்றும் பொறையாத்தம்மன் பூஜையுடன்துவங்கியது.
வில்லியனுார் அடுத்த திருக்காஞ்சியில் காசியிலும் வீசம் அதிகம் என அழைக்கப்படும்கங்கைவராக நதீஸ்வரர் கோவில் உள்ளது. இவ்வாண்டு மாசி மக தீர்த்தவாரி உற்சவம் வரும் 8ம் தேதி நடக்கிறது. இதற்கான பூஜை இன்று காலை கணபதி ஹோமமும், மாலை வாஸ்து சாந்தி பூஜை நடக்கிறது.தொடர்ந்து நடைபெறும் விழாவில் வரும் 2ம் தேதி மாலை பாரிவேட்டையும், 3ம் தேதி பஞ்சமூர்த்தி உற்சவம், 5ம் தேதி திருக்கல்யாணம், 7 ம் தேதி தேர் திருவிழா நடைபெறுகிறது.முக்கிய விழாவாக வரும் 8 ம்தேதி காலை 7.30 மணிக்கு மேல் 9:00 மணிக்குள் மாசிமக தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது. தீர்த்தவாரி நிகழ்ச்சியில் உறுவையாறு, மங்கலம், அரியூர், கரிக்கலாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சுவாமிகள் தீர்த்தவாரியில் கலந்துகொள்ளும். மேலும் புதுச்சேரி மற்றும் தமிழக பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் தீர்த்தவாரியில் கலந்துகொண்டு புனித நீராடுவார்கள். 9ம் தேதி விடையாற்றி உற்சவத்துடன் மாசிமக விழா நிறைவு பெறுகிறது.விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தனி அதிகாரி சீத்தாராமன், கோவில் தலைமை குருக்கள் சரவண சிவாச்சாரியார் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.