பதிவு செய்த நாள்
27
பிப்
2020
12:02
வெள்ளகோவில்: ஓலப்பாளையம், முருக்கங்காட்டுவலசு, தம்பிக்கலையசுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.
திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே முருக்கங்காட்டு வலசு தம்பிக்கலைய சுவாமி கோவிலில் 12 ஆண்டுகளுக்குப் பின் புதுப்பிக்கப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. கணபதி ஹோமத்தில் துவங்கி, வாஸ்து சாந்தி, முதல் கால யாக பூஜை, முளைப்பாலிகை அழைத்தல், சுவாமிக்கு மருந்து சாத்துதல், இரண்டாம் கால யாக பூஜை, காவிரி, கங்கை, யமுனை, காசி,திருச்செந்தூர், கன்னியாகுமரி, மடவிளாகம், ஆகிய புண்ணிய தீர்த்தங்கள் மூலம் கும்பாபிஷேக விழா நேற்று காலை 9.50 மணி அளவில் நடந்தது. தொடர்ந்து தம்பிக்கலையசாமி அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடந்தது.பிரசாதம் வழங்கப்பட்டது. பெருந்துறை பொன்னுசாமி சிவாச்சாரியார் தலைமையில் கார்த்திகேய சிவாச்சாரியார் சர்வசாதகம் செய்தனர். கும்பாபிஷேக நேரத்தில் கருடன் வானத்தில் வட்டமிட்டது குறிப்பிடத்தக்கது.பக்தர்கள் மெய்சிலிர்ப்புடன் தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் குடிப்பாட்டுக்கரர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.