Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மனிதன் மாறி விட்டான் கடவுளின் திருநாமங்களை எப்போது ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மன்னருக்கு அஞ்சாத யோவான்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2020
05:07


செக்கரியா, எலிசபெத் தம்பதிக்கு முதிர் வயதில் பிறந்த குழந்தை யோவான். கடவுளின் அற்புதத்தைக் கண்டு வியந்த செக்கரியா
“குழந்தாய்! ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த அவர் முன்னே செல்வாய்’’ என வாழ்த்தினார். யோவான் இயேசுவை விட ஆறு மாதம் மூத்தவர். இருவரும் சொந்தக்காரர்கள்.
பாலைவனத்தில் வாழ்ந்த யோவானுக்கு ஒட்டக மயிரும், வார் கச்சையும் அவரது ஆடைகள்.  காட்டுத்தேனும் வெட்டுக்கிளியுமே உணவு. யோவானுக்கு ஆண்டவரின் அழைப்பு வந்தது. மக்களின் மன மாற்றத்துக்காகப் போதிக்க ஆரம்பித்தார். அவரது போதனையில் ஈடுபட்ட பலர் திருமுழுக்கு பெற்றனர். அவர்கள், “நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” எனக் கேட்டனர்.
“உன்னிடம் இரண்டு அங்கி இருந்தால், ஒன்றை இல்லாதவனுக்குக் கொடு. இருக்கும் உணவையும் பகிர்ந்து சாப்பிடு’’ என்றார்.
வரி வசூலிப்பவர்கள் அவரிடம்  “நாங்கள் என்ன செய்ய வேண்டும்” ? எனக் கேட்டனர்.
“எவ்வளவு வசூலிக்க வேண்டுமோ அதை மட்டும் வசூலியுங்கள். நேர்மையாய் இருங்கள்” என்றார்.
படைவீரர்கள், “நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்றனர்.
“யாரையும் அச்சுறுத்தி பணம் பறிக்க வேண்டாம். பொய் குற்றம் சுமத்த வேண்டாம். சம்பளமே போதும் என்றிருங்கள்” என்றார்.
யோவானைப் பற்றிய பேச்சு ஊரெங்கும் பரவியது. அப்போது குறுநில மன்னர் ஏரோது ஆட்சி செய்தார். தம் சகோதரனின் மனைவியான ஏரோதியாளை அபகரித்து அவளுடன் வாழத் தொடங்கினார்.  
“ஏரோது! நீ செய்வது பாவம்! மனம் திரும்பு’’ என யோவானின் குரல் அச்சமின்றி தெரிவித்தார். கோபமடைந்த மன்னர்  யோவானைச் சிறையில் அடைத்தார். அப்போது, ‘‘யோவானை விடப் பெரியவர் யாரும் இல்லை” என இயேசு அறிக்கையிட்டார்.  இந்நிலையில் ஒருநாள் ஏரோதின் பிறந்த நாள் வந்தது.
ஏரோதியாளின் மகள் சலோமி என்பவள் அற்புதமான நாட்டியத்தை மன்னரின் முன் நடத்தினாள்.
“என்ன வேண்டுமோ கேள்! நான் தருகிறேன்”  என மன்னர் அறிவித்தார்.
“யோவானின் தலையை ஒரு தட்டில் வைத்துத் தரவேண்டும்” என்றாள் சலோமி. அவளது தாயின் அறிவுரை அதுவாக இருந்தது. அதன்படி யோவானின் தலை வெட்டப்பட்டு தட்டில் வைத்து அளிக்கப்பட்டது. அதை அவளும் கொண்டு போய் தன் தாயிடம் கொடுத்தாள்.
தயங்காத மனம், அஞ்சாத உறுதி மிக்க யோவானின் வாழ்வு இத்துடன் நிறைவு பெற்றது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 
ஆடி என்றொரு கொடிய அரக்கன் முன்னொரு காலத்தில் இருந்தான். பிரம்மாவை வேண்டிப் பல வரங்களைப் பெற்றான். ... மேலும்
 
கவலை, கடன்களில் இருந்து மீள வழி கூறுங்கள் என அறிஞரிடம் ஒருவர் கேட்டார்.அதற்கு அவர் உங்களுக்காக ... மேலும்
 

நீ நீயாக இரு ஏப்ரல் 05,2024

கழுதை ஒன்று வழி தவறி காட்டிற்குள் சென்றது. அங்கு இருந்த மானிடம், ‘ஏன் எல்லா விலங்குகளும் ஓடுகிறது’ எனக் ... மேலும்
 

ராஜா மரியாதை ஏப்ரல் 05,2024

* நீதியின் பாதையில் நடப்பவர்களுக்கு ராஜமரியாதை கிடைக்கும்.* தேவனிடம் கேட்பது கிடைக்கும்.* எண்ணத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar