எழுமலை: எழுமலை மாதாந்திர சுப்ரமணியர் கோயிலில் கந்த சஷ்டியை முன்னிட்டு சுவாமி மயில் வாகனத்தில் எழுமலை முத்தாலம்மன் கோயில் அருகே எழுந்தருளி சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று காலை கந்தசஷ்டி நிறைவாக கோவிலில் சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானைக்கு பக்தர்களின் அரோகரா வாழ்த்துக்களுடன் திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானமும், சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.