“நேற்று வரை பங்களா வாழ்க்கை, ஏசி அறையில் துாக்கம், ருசியான உணவு.... ஆனால் இன்று நிலைமை மாறி விட்டது. வியாபாரம் படுத்து விட்டது. பார்த்த வேலை பறி போய் விட்டது. ஐயோ! இந்த பூமியில் என்னால் இனி வாழ முடியுமா?” என மனிதன் வேதனைப்படுவது தவறு. நேற்று வரை ஏழ்மை, இன்று வசதி வந்து விட்டதும் ஆட்டம்... என வாழ்ந்தாலும் அதுவும் தவறு தான். “தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும், பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும், போதிக்கப்பட்டேன்” என்கிறது பைபிள். ஏழ்மையிலும், செல்வ நிலையிலும் ஒரே மனநிலையுடன் இருக்க வேண்டும். சென்றதை எண்ணி வருந்தவோ, வந்ததை நினைத்து மகிழ்வதோ கூடாது. எல்லாம் மாறக்கூடியதே. எதுவும் நிரந்தரம் அல்ல.