மூடையை சுமந்தபடியே மக்கா நகரை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தார் ஒரு மூதாட்டி. ‘‘தாயே! நீங்கள் விரும்பினால் மூடையை சுமந்து வருகிறேன்” என்றார் நாயகம். மூதாட்டியும் சம்மதித்தார். தனக்கு உதவுபவர் யார் என்பதை அறியாத அவர், ‘‘மக்கா நகரில் முகம்மது என்று ஒரு மனிதர் இருக்கிறார். அவரைப் பின்பற்றி அனைவரும் வாழ வேண்டும் என அறிவுரை சொல்லி வருகிறார். யஹூதி இனத்தைச் சேர்ந்த எனக்கு விருப்பமில்லை என்பதால் ஊரை விட்டே வெளியேறப் போகிறேன்” என்றார். மறுப்பேதும் சொல்லாமல் மூதாட்டி குறிப்பிட்ட இடம் வரை வந்து மூடையைச் சுமந்து வந்தார். சில திர்ஹம் நாணயங்களைச் சன்மானமாக நீட்டினார் மூதாட்டி. “வேண்டாம் தாயே! பணத்திற்காக சுமக்க வில்லை. தங்களுக்கு உதவுவதே என் நோக்கம்’’ என்றார். கொள்ளையர்கள் நிறைந்த இந்த ஊரில் இப்படியும் ஒரு நல்ல மனிதனா என ஆச்சரியப்பட்டார் மூதாட்டி. ‘‘உன் பெயரையாவது சொல்வாயா?” எனக் கேட்டார். “யாருக்காக ஊரை விட்டு வெளியேறுகிறீர்களோ அந்த முகம்மது நான் தான்” என புன்னகைத்தார். மூதாட்டி தன் தவறை மன்னிக்கும்படி கேட்டுக் கொண்டார்.