Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ... பழநியில் அரோகரா கோஷத்துடன் வைகாசி விசாக தேரோட்டம் கோலாகலம் பழநியில் அரோகரா கோஷத்துடன் வைகாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்துாரில் வைகாசி விசாகம் கோலாகலம் : பக்தர்கள் புனித நீராடினர்
எழுத்தின் அளவு:
திருச்செந்துாரில் வைகாசி விசாகம் கோலாகலம் : பக்தர்கள் புனித நீராடினர்

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2022
08:06

திருச்செந்துார் கடற்கரையில் வைகாசி விசாகத்திருவிழாவிவை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடினர்.

திருச்செந்துார், ஜூன். 13-திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று நடந்த வைகாசி விசாக திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கடலில் புனித நீராடி, சுவாமி தரிசனம் செய்தனர். முருகப்பெருமான் பிறந்த ஜென்ம நட்சத்திரமான வைகாசி விசாக நட்சத்திர நாளை விசாக பெருந்திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் முருகப்பெருமானை வழிப்பட்டால் கிடைக்கும் பலன் வைகாசி விசாக திருவிழா அன்று தரிசனம் செய்தால் கிடைக்கும் என்பது ஐதீகம்.விசாக திருவிழாவை முன்னிட்டு திருச்செந்துார் கோயிலில் நேற்று அதிகாலை ஒரு மணிக்கு நடை திறக்கப்பட்டது.

அதிகாலை 1:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலை 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகம், சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனைக்கு பின்னர், சுவாமி ஜெயந்திநாதர் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு முனிகுமாரர்களுக்கு சாப விமோச்சனம் அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இரவு 7.15 மணிக்கு இராக்கால அபிஷேகம் நடந்தது.வைகாசி விசாகத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்துாரில் குவிந்தனர். .

நேற்று அதிகாலையிலிருந்து பக்தர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பாதயாத்திரையாக குவிந்த பக்தர்கள் நீண்ட வேல்களால் அலகு குத்தியும், புஷ்ப காவடி, இளநீர் காவடி, பால்குடம் எடுத்தும் வந்து நேர்த்தி கடனை செலுத்தினர். நெல்லை, நாகர்கோவில், துாத்துக்குடி உள்ளிட்ட வழித்தடங்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இன்று (13ம் தேதி) அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. அதிகாலை 4:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7.15 மணிக்கு ராக்கால அபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் தக்கார் கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்;  உலகில் அமைதி, செழிப்பு நிலவ வேண்டி, சத்ய சாயி நிறுவனங்கள் சார்பில் ராமேஸ்வரத்தில்  ... மேலும்
 
temple news
புதுச்சேரி: கருவடிக்குப்பம் அரிச்சந்திரன் கோவிலில் 108 சங்காபிஷேகம் கணபதி ஹோமத்துடன் நேற்று ... மேலும்
 
temple news
இளையான்குடி: இளையான்குடி மாறநாயனார் குருபூஜை விழாவில் நூற்றுக்கணக்கான சிவனடியார்கள் கலந்து ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சதுர்த்திப் பெருவிழாவை முன்னிட்டு நடந்த ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை அருகே, அமராவதி ஆற்றின் கரையில், பழமையான அம்மன் சிலை கண்டறியப்பட்டுள்ளது. உடுமலை வரலாற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar