பதிவு செய்த நாள்
07
செப்
2012
01:09
புரட்டாசி: சூழ்நிலைக்கு ஏற்ப திறமையுடன் செயல்படும் ரிஷபராசி அன்பர்களே!
உங்கள் ராசிநாதன் சுக்கிரன் சுக ஸ்தானமான நான்காம் இடத்தில் நல்ல அனுகூலத்துடன் உள்ளார். ஆறாம் இடத்தில் சனி, புதன் சிறந்த பலன்தரும் வகையில் உள்ளனர். குடும்பத்தேவை நிறைவேற புதிய முயற்சி, திட்டங்களில் ஈடுபடுவீர்கள். எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். அக்கம்பக்கத்தவரின் அன்பு மனதை நெகிழ வைக்கும். வீடு, வாகனத்தில் பெறுகிற வசதி சிரமமின்றி கிடைக்கும். புத்திரர்கள் தகுதி, திறமை வளர்த்து படிப்பு, வேலைவாய்ப்பில் முன்னேற்றம் காண்பர். எதிரிகளின் திறமையைக் குறைத்து மதிப்பிடக்கூடாது. குடும்பத்தில் மங்கல நிகழ்வு, வெளியூரிலிருந்து சுபசெய்தி மனதை மகிழ்விக்கும். தம்பதியர் ஒற்றுமை சீர்பெற விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு அவசியம். தொழிலதிபர்கள் நிர்வாக நடைமுறை சீராகி உற்பத்தியில் உயர்வு காண்பர். வியாபாரிகள் போட்டி குறைந்து விற்பனையில் புதிய சாதனை அளவை எட்டுவர். லாபம் அபரிமிதமாக இருக்கும். பணியாளர்கள் அதிக பொறுப்புடன் செயல்பட்டு இலக்கை நிறைவேற்றுவர். குடும்பப் பெண்கள் கணவரின் கருத்துக்களை ஏற்று அமைதியுடன் செயல்படுவதால் பிரச்னை ஓரளவு குறையும். பணிபுரியும் பெண்கள் நிலுவைப்பணி நிறைவேற்றி நன்மதிப்பு பெறுவர். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, விற்பனை சிறந்து உபரி பணவரவு காண்பர். விவசாயிகள் எதிர்பார்த்த மகசூல் கிடைக்கப்பெறுவர். கால்நடை வளர்ப்பிலும் தாராளமான வரவு உண்டு. அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைக்கும். மாணவர்கள் தரத்தேர்ச்சி பெற்று பெற்றோரிடம் விரும்பிய பரிசு கேட்டுப்பெறுவர்.
பரிகாரம்: பெருமாளை வழிபடுவதால் தொழில் சிறந்து பணவரவு கூடும்.
உஷார் நாள்: 22.9.12 மாலை 6.39-24.9.12 இரவு 9.42.
வெற்றி நாள்: செப்டம்பர் 29, 30
நிறம்: வெள்ளை, மஞ்சள் எண்: 2, 3