Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

முதல் பக்கம் » தகவல்கள்
திருப்பதியில் பிர‌ம்மோற்சவம் கோலாகலம்!
செப்டம்பர் 18,2012
அ-
+
Temple images

திருப்பதி: திருப்பதியில் பிரமோற்சவ விழா துவங்கியது. பிர‌ம்மோற்சவ விழாவிற்கு அனைத்து ஏற்பாடுகளையும் நிர்வாகம் செய்துள்ளது. இப்பிரம்மோற்சவத்தை காண ஏராளமான பக்தர்கள் திருப்பதி வருவதை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.

சிறப்பு பேருந்துகள்: வெங்கடேசப் பெருமாள் கோவிலில் நடக்கும் பிரம்மோற்சவத்தையொட்டி, 26ம் தேதி வரை, திருப்பதிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. விழுப்புரம் போக்குவரத்துக் கழகத்தின் அறிக்கை: பக்தர்கள் வசதிக்காக, விழுப்புரம், சென்னை, கோயம்பேடு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திண்டிவனம், புதுச்சேரி, வேலூர், குடியாத்தம், பேர்ணாம்பட்டு, ஆம்பூர், திருப்பத்தூர், ஆற்காடு, வந்தவாசி, அரக்கோணம், திருத்தணி ஆகிய இடங்களில் இருந்து திருப்பதிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share  
Bookmark and Share

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2013 www.dinamalar.com. All rights reserved.