Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்துார் முருகன் கோவிலில் ... அய்யலூர் பாலமுருகன், மகாசக்தி நாகம்மன், கருப்பசாமி கோயில் கும்பாபிஷேகம் அய்யலூர் பாலமுருகன், மகாசக்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

14 ஆக
2025
11:08

திருச்செந்தூர்; திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 1.30க்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. 


முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறக்கூடிய முக்கிய திருவிழாக்களில் ஒன்றானது ஆவணித்திருவிழா. இந்த ஆண்டு ஆவணித் திருவிழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு  அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 1.30 விஸ்வரூபம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து கோவில் உள்பிரகாரத்தில் உள்ள செப்பு கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கொடியேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து கொடி மரத்திற்கு பால், பன்னீர், சந்தனம், விபூதி உள்ளிட்ட பல்வேறு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 12 நாட்கள் நடைபெறக்கூடிய திருவிழாவில் ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலையில் சுவாமி, அம்பாள் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலாவரும் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருவிழா தேரோட்டம் 23-ம்தேதி சனிக்கிழமை நடக்கிறது. அன்று கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு 5.30 விஸ்வரூபம் 6.15க்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் காலை 7 மணிக்கு மேல் தேரோட்டம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை தக்கார் அருள் முருகன், கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சஷ்டி முருகனை வழிபட மிகவும் முக்கியமான விரத நாளாகும். கந்தனை வழிபட கஷ்டங்கள் தவிடு பொடியாகும். ... மேலும்
 
temple news
செஞ்சி; மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் கெங்கையம்மனுக்கு சாகை வார்த்தல் திருவிழா ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே பிரான்மலையில் பாண்டியர் காலத்து புராதன தெப்பக்குளம் பராமரிப்பு ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி அருகே பொக்கனாரேந்தல் கிராமத்தில் உள்ள இடர் நீக்கியம்மன், புல்லாணி ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள வாராஹி அம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar