Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி ... மேல்மலையனூர் கெங்கையம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா மேல்மலையனூர் கெங்கையம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பராமரிப்பு இல்லாத பாண்டியர் காலத்து திருக்கொடுங்குன்றநாதர் தெப்பக்குளம்
எழுத்தின் அளவு:
பராமரிப்பு இல்லாத பாண்டியர் காலத்து திருக்கொடுங்குன்றநாதர் தெப்பக்குளம்

பதிவு செய்த நாள்

14 ஆக
2025
10:08

சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே பிரான்மலையில் பாண்டியர் காலத்து புராதன தெப்பக்குளம் பராமரிப்பு இல்லாமல தண்ணீர் வரத்து இல்லாமல் வறண்டு கிடக்கிறது.


பாரி ஆண்ட பறம்பு மலை என அழைக்கப்படுவதும் பாண்டிய நாட்டு 14 திருத்தலங்களில் ஐந்தாவது சிறப்புக்குரியதுமான பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் கோயில் முன்பாக பழமையான தெப்பக்குளம் உள்ளது. பாண்டிய காலத்தில் கட்டப்பட்டதற்கு ஆதாரமாக குளத்தைச் சுற்றிலும் மீன்சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. மூன்று படித்துறை உள்ள நிலையில் வடக்கு படித்துறையில் பழமையான விநாயகர், முருகன் சிலைகள் உள்ளன. கோயில் வழிபாட்டிற்கு இக்குளத்தின் தண்ணீரை எடுத்து பயன்படுத்தி இருக்கிறார்கள். இந்நிலையில் இந்த ஊரணிக்கு மலையில் இருந்து ஓடிவரும் மழை நீர் பிடாரியம்மன் ஊரணியில் விழுந்து அங்கிருந்து மறுகால் மூலம் இந்த ஊரணிக்கு வரும் வகையில் கட்டமைப்புகள் இருந்தது. ஆனால் பல இடங்களில் கால்வாய்கள் சிதலமடைந்ததால் ஊரணிக்கு தண்ணீர் வருவது தடைபட்டுள்ளது. இதனால் பெரிய மழை பெய்தாலும் கூட இந்த ஊரணி நிரம்ப தாமதமாகிறது. கடந்த வாரம் இப்பகுதியில் பெய்த கனமழை மற்றும் தொடர்ச்சியாக பெய்து ஒரு மழையின் போது கூட இந்த ஊரணிக்கு தண்ணீர் முறையாக வந்து சேரவில்லை. இதற்கிடையில் இந்த ஊரணி அருகேயும், கோயில் அலங்கார வளைவு அருகேய இரவு நேரங்களில் குடிமகன்கள் அமர்ந்து மது அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் கோயிலின் புனிதம் பாதிக்கப்படுகிறது. எனவே ஊரணியை மராமத்து செய்து தண்ணீர் நிரம்புவதற்கு வழி செய்வதுடன், குடிமகன்களின் பிடியில் இருந்து ஊரணியை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
யுகாதி (உகாதி )என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் உலக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar