Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முத்து மாரியம்மன் கோயிலில் ... சிங்கம்புணரியில் தயாராகும் விநாயகர் சிலைகள் சிங்கம்புணரியில் தயாராகும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பஞ்ச பாண்டவர் மலைக்கு பாதை இல்லை : பரிதவிப்பில் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பஞ்ச பாண்டவர் மலைக்கு பாதை இல்லை : பரிதவிப்பில் பக்தர்கள்

பதிவு செய்த நாள்

14 ஆக
2025
04:08

மேலூர்; கீழவளவில் வரலாற்று சிறப்புமிக்க தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள பஞ்ச பாண்டவர் மலைக்கு செல்வதற்கு பாதை இல்லாததால் பக்தர்கள் மலைக்குச் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.


இம் மலை கி.பி., இரண்டு முதல் 11ஆம் நூற்றாண்டு வரை சமணர்கள் வழிபாட்டுத் தலமாகவும், மலை மீது மூன்று, குகை தளத்தில் ஆறு தீர்த்தங்கரர் உருவங்களும் செதுக்கப்பட்டுள்ளது. தவிர பிராமிய கல்வெட்டுகள், கல் படிக்கட்டுகள், மலையடிவாரத்தில் விநாயகர் முருகன் கோயில்களும் உள்ளது. இங்கு கீழவளவு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் திருமணம் நடத்துவது வழக்கம். இம்மலை தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் கூறியதாவது: மெயின் ரோட்டில் இருந்து மலைக்குச் செல்ல 370 மீ., தூரம் பாதை இல்லாமல் தனியார் பட்டா நிலத்தின் வழியாக செல்கிறோம். அதனால் ரோடு அமைக்க முடியாமல் மேடு, பள்ளமாகவும் சேறும், சகதியுமாக உள்ளது. இம் மலையில் ஆராய்ச்சி செய்வதற்காக செல்லும் வரலாற்று துறை மாணவர்கள், வெளிநாட்டவர்கள் மற்றும் திருமணம் செய்ய வருவோர்கள் மலைக்குச் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். ரோடு அமைக்க கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியும், அதிகாரிகளிடம் மனு கொடுத்ததின் பேரில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் ஊராட்சி நிர்வாகத்தினர் அளவீடு செய்ததோடு சரி ரோடு போடவில்லை. அதனால் மாவட்ட நிர்வாகம் இவ்விஷயத்தில் தலையிட்டு ரோடு அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர்; திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
செஞ்சி; சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் பவித்ரோட்சவம் நடந்தது.செஞ்சி அடுத்த சிங்கவரம் ரங்கநாதர் ... மேலும்
 
temple news
வால்பாறை; வால்பாறை, சுப்ரமணிய சுவாமி கோவிலில் நடந்த ஆடி மாத சஷ்டி பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் ஸ்ரீநிவாச பெருமாளுக்கு 108 கலச அபிஷேகம் ... மேலும்
 
temple news
செஞ்சி; மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் கெங்கையம்மனுக்கு சாகை வார்த்தல் திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar