Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை மீனாட்சி நவராத்திரி விழா ... மகாளய அமாவாசை: புனித நீராடி ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம்! மகாளய அமாவாசை: புனித நீராடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கூத்தனூர் சரஸ்வதி கோயிலில் சாரதா நவராத்திரி விழா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

13 அக்
2012
02:10

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், கூத்தனூர் மஹா சரஸ்வதி அம்மன் திருக்கோயிலில் அக். 10 முதல் அக் 26 வரை சரஸ்வதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரங்களுடன் சாரதா நவராத்திரி மஹோத்ஸவ விழா நடைபெறுகிறது. தமிழகத்தில் சரஸ்வதி அம்மனுக்கு என தனியாக அமைக்ப்பட்டுள்ள கோயில் இது.

அக். 15 காலை 9 மணிக்கு அம்பாள் அபிஷேகம், மாலை 4 மணிக்கு துர்க்காபரமேஸ்வரி திருவுருவ அலங்காரத்தில் சந்தனகாப்பு அம்பாள் திருக்காட்சி, இரவு 6 மணி முதல் 8 மணி வரை வெங்கடேஸ்வரா மழலையர் தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகளின் பரதநாட்டியம், இரவு 8 மணிக்குமேல் 9 மணிக்குள் பாலிகை, காப்பு கட்டுதல், இரவு 8.30 மணிக்கு மகாதீபாராதனை, இரவு 9 மணிக்கு  விநாயகர் பெருமான் திருவீதி உலா நடைபெறுகிறது. அக். 16 காலை 9 மணிக்கு அம்பாள் அபிஷேகம், மாலை 4 மணிக்கு  சந்தனகாப்பு திருவுருவ அலங்காரத்தில் அம்பாள் திருக்காட்சி, மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை பக்தி இன்னிசை, மாலை 6-30 மணி முதல் இரவு 8-30 மணி வரை கும்ப÷.காணம் சிவசக்தி நடனப்பள்ளி குழுவினரால் பரதநாட்டியம், இரவு 8.30 மணிக்கு  மகாதீபாராதனை, இரவு 9.30 மணிக்கு விநாயகர்  திருவீதி உலா நடைபெறுகிறது.
அக். 17 காலை 9 மணிக்கு அம்பாள் அபிஷேகம், மாலை 4 மணிக்கு ராஜ ராஜேஸ்வரி திருவுருவ அலங்காரத்தில் அம்பாள் திருக்காட்சி, மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை வயலின் இன்னிசை, இரவு 8.30 மணிக்கு மகாதீபாராதனை, இரவு 9.30 மணிக்கு விநாயகர் திருவீதி உலா நடைபெறுகிறது. அக். 18 காலை 9 மணிக்கு அம்பாள் அபிஷேகம், மாலை 4 மணிக்கு மகாலெட்சுமி திருவுருவ அலங்காரத்தில் அம்பாள் திருக்காட்சி, மாலை 4 மணி முதல் 6 மணி வரை பக்திஇன்னிசை, மாலை 6-00 மணி முதல் 8-00 மணி வரை இன்னிசை, இரவு 8.30 மணிக்கு மகாதீபாராதனை, இரவு 9 மணிக்கு விநாயகர் திருவீதி உலா நடைபெறுகிறது.

அக். 19 காலை 9 மணிக்கு அம்பாள் அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாகம்பரி திருவுருவ அலங்காரத்தில் அம்பாள் திருக்காட்சி, மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை கூத்தனூர் தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்களின் நாட்டியநிகழ்ச்சி, இரவு 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை பாட்டு, இரவு 8.30 மணிக்கு மகாதீபாராதனை, இரவு 9.30 மணிக்கு விநாயகர் திருவீதி உலா நடைபெறுகிறது. அக். 20 காலை 9 மணிக்கு அம்பாள் அபிஷேகம், மாலை 4 மணிக்கு சந்தானலட்சுமி திருவுருவ அலங்காரத்தில் அம்பாள் திருக்காட்சி, மாலை 4 மணி முதல் 5மணி வரை வயலின் இசை, மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பக்தி இன்னிசை, இரவு 8.30 மணிக்கு மகாதீபாராதனை, இரவு 9.30 மணிக்கு விநாயகர் பெருமான் திருவீதி உலா நடைபெறுகிறது.

அக். 21 காலை 9 மணிக்கு அம்பாள் அபிஷேகம், மாலை 4 மணிக்கு மகாலெட்சுமி திருவுருவ அலங்காரத்தில் அம்பாள் திருக்காட்சி, மாலை 5 மணி முதல் 6 மணி வரை வீணை இசை, மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை நாட்டியாஞ்சலி, இரவு 8 மணிக்கு மகாதீபாராதனை, இரவு 9மணிக்கு விநாயகர் பெருமான் திருவீதி உலா நடைபெறுகிறது. அக். 22 காலை 9 மணிக்கு அம்பாள் அபிஷேகம், மாலை 4 மணிக்கு சரஸ்வதி திருவுருவ அலங்காரத்தில் அம்பாள் திருக்காட்சி, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை லலிதாம்பிகா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவ மாணவிகளின் நாட்டிய நிகழ்ச்சி, இரவு 8.30 மணிக்கு மகா தீபாராதனை, இரவு 9.30 மணிக்கு விநாயகர் பெருமான் திருவீதி உலா, நடைபெறுகிறது. அக். 23 சரஸ்வதி பூஜை தினத்தன்று காலை 9 மணிக்கு அம்பாள் அபிஷேகம், அதனைத் தொடர்ந்து அம்பாள் திரு பாத தரிசனம், இரவு 6 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தி இன்னிசை மற்றும் சமாராதனை போஜனம், இரவு 8.30 மணிக்கு  மகாதீபாராதனை, இரவு 9.30 மணிக்கு விநாயகர் பெருமான் திருவீதி உலா நடைபெறுகிறது. அக். 24 விஜயதசமி தினத்தன்று காலை 7 மணிக்கு பால வித்யாரம்பம், காலை 9 மணிக்கு அம்பாள் ஏகதேச ருத்ராபிஷேகம், மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை பக்திஇன்னிசை, மாலை 6.30 மணி முதல் 8 மணி வரை பரதநாட்டியம், இரவு 8 மணிக்கு நவசக்தி அர்ச்சனை, இரவு 10 மணிக்கு அம்பாள் திருவீதியுலா, நடைபெறுகிறது. அக். 25 சப்தாவரண மண்டகப்படி, காலை 10 மணிக்கு அம்பாள் அபிஷேகம், இரவு 6 மணி முதல் 8 மணி வரை நாதஸ்வர இன்னிசை, இரவு 10 மணிக்கு மகாதீபாராதனை, இரவு 10.30 மணிக்கு அம்பாள் திருவீதி உலா நடைபெறுகிறது. அக்.26 விடையாற்றி உற்சவம், காலை 9 மணிக்கு அம்பாள் அபிஷேகம்,மாலை 6 மணிக்கு பாலிகை விடுதல், இரவு 7 மணிக்கு மகா தீபாராதனை நடைபெறுகிறது. அக். 27முதல் நவ. 4 வரை இரவு 7 மணிக்கு சகஸ்ரநாம அர்ச்சனை, இரவு 8 மணிக்கு மகா தீபாராதனை, நவ 4 ம்தேதி காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் உற்சவர் ப்ராயசித்த அபிஷேகம், யதாஸ்தானம் நடைபெறுகிறது.

இருப்பிடம்: திருவாரூரிலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் உள்ள பூந்தோட்டத்தில் இறங்கி அங்கிருந்து பிரியும் ரோட்டில் 6 கி.மீ., சென்றால் இக்கோயிலை அடையலாம்.

போன்: 04366-239909.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உடுமலை; உடுமலையில் பிரசித்தி மாரியம்மன் கோவிலில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஓம் சகதி பராசக்தி ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: மதுரை வண்டியூர் தேனுார் மண்டபத்தில் நேற்று மண்டூக முனிவருக்கு கருட வாகனத்தில் சாப ... மேலும்
 
temple news
xதஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தமிழ் கடவுள் என போற்றப்படும் முருகனின் அறுபடை ... மேலும்
 
temple news
மானாமதுரை; சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வீர அழகர் கோவில் சித்திரை திருவிழாவில் நிலாச்சோறு ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை அரங்கநாதர் கோவிலில் சித்ரா பவுர்ணமியை ஒட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar