Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பம்: ஜம்முன்னு இருக்கலாம் டும் ... மேஷம்: யம்மா யம்மா பம்பரமா மனசு சுத்துமம்மா! மேஷம்: யம்மா யம்மா பம்பரமா மனசு ...
முதல் பக்கம் » ஆங்கில புத்தாண்டு ராசிபலன் - 2021
மீனம்: எதிர்நீச்சல் போடுங்க! முன்னேறிச்செல்லுங்க!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 டிச
2012
04:12

கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் மீனராசி அன்பர்களே!

புத்தாண்டில் குரு, சனி, ராகு, கேது ஆகிய நால்வரும் சிரமமான பலன்களை வழங்குகிற வகையில் உள்ளனர். இருப்பினும் குரு பார்வை பதிகிற ஸ்தானங்களின் வழியாக அனுகூல பலன்களை பெறுவீர்கள். அஷ்டம ஸ்தானத்தில் உள்ள சனி, ராகுவின் அமர்வு உங்கள் வாழ்வியல் நடைமுறையில் சிரமங்களை உருவாக்கும். இருந்தாலும் அதில் கிடைக்கும் அனுபவத்தை பாடமாக எடுத்துக் கொள்வீர்கள். ஆண்டு முழுவதும் எதிர்நீச்சல் போட்டால் தான் முன்னேற்றப் பாதையில் செல்ல முடியும்.பிறரிடம் தேவையற்ற விஷயங்களைப் பற்றி விவாதம் செய்வது கூடாது. சொந்தப்பணியில் கவனம் செலுத்தினால் மட்டுமே, மனதில் நிம்மதி நிலைக்கும். புதிய முயற்சிகளில் ஓரளவே வெற்றி கிடைக்கும். உடன்பிறந்தவர்களிடம் கருத்துவேறுபாடு வராத அளவிற்கு நடந்து கொள்வது நல்லது. வீடு, வாகனத்தில் நம்பகக் குறைவான எவருக்கும் இடம் தரவேண்டாம். தகுந்த பாதுகாப்பு நடைமுறையைப் பின்பற்றுவது அவசியம். வாகன பயணத்திலும் மிதவேகம் தேவை. புத்திரர்கள் செயல்திறன், படிப்பில் பின்தங்குகிற கிரகநிலை உள்ளது. தகுந்த ஆலோசனை வழங்கி நல்வழிப்படுத்துவீர்கள்.

அஷ்டமச்சனியின் தாக்கத்தினால் தவிர்க்க இயலாத வகையில் செலவு பன்மடங்காகும். சிக்கனத்தைக் கடைபிடிப்பது எதிர்கால நன்மைக்கு வழிவகுக்கும். சொத்து ஆவணங்களின் பேரில் கடன் பெறும்போது, அரசு வங்கி போன்ற நம்பகமானவர்களிடம் வாங்கினால் சிரமத்தை தவிர்க்கலாம். ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் அக்கறை தேவைப்படும். சத்துநிறைந்த உணவு, அடிக்கடி மருத்துவ ஆலோசனை எடுத்துக் கொள்வது உடல்நலம் சீர்படுத்த துணை நிற்கும். விலை உயர்ந்த பொருட்கள் திருட்டு போகாமல் தவிர்க்க விழிப்புடன் இருப்பது அவசியம். பிராணிகளிடம் விளையாடுவது கூடாது. ஆன்மிக வழிபாட்டால் மனநலம், உடல்நலத்தைப் பாதுகாக்கலாம். தம்பதியர் குடும்ப நன்மை கருதி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வர். நன்கு பழகிய நண்பர்கள் கூட விலகிச்செல்வதை தெரிந்து கொள்வீர்கள். தொழில் சார்ந்த வகையில் சுமாரான வருமானம் கிடைக்கும்.சிலருக்கு பணியிடத்தில் தொந்தரவு, வேண்டாத இடமாற்றம் ஏற்படவும் வாய்ப்புண்டு. கஷ்ட சூழ்நிலையை சரிசெய்ய பூர்வ புண்ணியம் மட்டுமே துணைநிற்கும். வெளிநாடு வேலைவாய்ப்பை முயற்சிப்பவர்களுக்கு குறைந்த சம்பளத்தில் அளவான சலுகையுடன் வாய்ப்பு கிடைக்கும்.

தொழிலதிபர்கள்:  உற்பத்தி, தரத்தை சீர்படுத்தவும், நிர்வாகத்தின் நற்பெயரை தக்க வைக்கவும் தொழிலதிபர்களின் நேரடி கண்காணிப்பு தேவைப்படும். லாபம் சுமாராக இருக்கும். விடாமுயற்சியால் மட்டுமே புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவர். தொழிலாளர்களின் ஆதரவு ஓரளவே கிடைக்கும். புதிய முயற்சிகளை வருங்காலங்களில் மேற்கொள்வது நல்லது. சட்டத்தை மதித்து நேர்மை வழியில் செயல்பட்டால் மட்டுமே பிரச்னைகளில் இருந்து தப்பிக்க முடியும். பங்குதாரர்களின் ஆலோசனைகளை ஏற்று நடப்பது நல்லது.

வியாபாரிகள்:  சந்தையில் போட்டி அதிகரிக்கும். விற்பனை இலக்கை அடைவதில் தாமதம் உருவாகும். லாபவிகிதம் குறைப்பதன் மூலம் வாடிக்கையாளர்களைத் தக்க வைக்கலாம். இருப்பு வைக்கும் குடோன்களில் தகுந்த பாதுகாப்பைப் பின்பற்றுவது அவசியம். அபிவிருத்தி பணிகளை இப்போதைக்குத் தவிர்ப்பது நல்லது. சக வியாபாரிகளின் ஆலோசனையைக் கேட்டுப் பெறுவர். .

பணியாளர்கள்:  அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் பொறுப்புணர்வுடன் செயல்படுவதால் மட்டுமே இருக்கிற நற்பெயரைப் பாதுகாக்க இயலும். குடும்ப அந்தரங்க விஷயங்களை சக பணியாளர்களிடம் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. பணி இலக்கை நிறைவேற்ற கூடுதல் நேரம் தேவைப்படும். பணிச்சுமையும் நாளுக்கநாள் அதிகரிக்கும். குடும்பத்தின் அத்தியாவசிய செலவுக்காக கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். இயந்திர தொழிற்சாலை பணியாளர்கள் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவதால் விபத்து அணுகாமல் தவிர்க்கலாம்.

பெண்கள்:  பணிபுரியும் பெண்கள் அடிக்கடி உடல்நலக்குறைவு, கவனச்சிதறலால் பணியில் தாமதம், குளறுபடி ஆகியவற்றைச் சந்திப்பர். அனுபவசாலிகளின் ஆலோசனைப்படி கேட்டுச் செயல்படுவது அவசியம். திட்டமிட்டுப் பணியாற்றினால் சிரமங்களைத் தவிர்க்க முடியும். குடும்ப பெண்கள் கணவரின் வருமானத்திற்கு ஏற்ப செலவைக் குறைக்க நேரிடும். தாய் வீட்டாரின் ஆதரவு அவ்வப்போது கைகொடுக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் அளவான மூலதனம், கடின உழைப்பு ஆகியவற்றால் உற்பத்தியை சீராக்குவர். கணவர், தோழியின் ஒத்துழைப்பும் சீராகக் கிடைக்கும்.

மாணவர்கள்: கல்வி கற்பதில் மந்தமான போக்கைக் கடைபிடிப்பர். விடாமுயற்சியுடன் படித்தால் மட்டுமே நல்ல தரதேர்ச்சி கிடைக்கும். செலவுக்கான பணம் பெறுவதில் திண்டாட்டம் உண்டாகும். நண்பர்களுடன் பொழுதுபோக்குவது கூடாது. சக மாணவர்களின் உதவி சுமாராக இருக்கும். 

அரசியல்வாதிகள்:  சமூகத்தில் பெற்ற நற்பெயரை பாதுகாக்க அதிக முயற்சி தேவைப்படும். ஆதரவாளர்களிடம் உங்களைப் பற்றிய மதிப்பீடு நல்லவிதமாக இருக்கும். எதிரிகளின் பலம் அதிகரிக்கும். நேரம் பார்த்து இடையூறு செய்ய முயற்சிப்பர். அரசியலில் நேர்மையைப் பின்பற்றினால் சிரமம் வராமல் தவிர்க்கலாம்.

விவசாயிகள்:  மக‹ல் ”மாராக இருக்கும். கால்நடை வளர்ப்பில் மிதமான லாபம் கிடைக்கும். நிலம் தொடர்பான விவகாரம் உள்ளவர்களுக்கு தீர்வு கிடைப்பதில் தாமதம் உண்டாகும்.

பரிகாரம்: பெருமாளை வழிபடுவதால் வாழ்வில் துன்பம் குறைந்து நன்மை பெறுவீர்கள்.

பரிகாரப் பாடல்:
குலம்தரும் செல்வம் தந்திடும் அடியார்
படுதுயர் ஆயின வெல்லாம்
நிலந்தரஞ் செய்யும் நீள்விசும்பு அருளும்
அருளொடு பெருநிலம் அளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற
தாயினும் ஆயின செய்யும்
நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்
நாராயண என்னும் நாமம்

ஜனவரி: ராகு, கேது, சனி, குரு ஆகிய ஆண்டு கிரகங்களின் சஞ்சாரத்தால் சுமாரான பலன் கிடைக்கும். மாத கிரகங்களால் நன்மை பெருகும். உடல்நலனில் அக்கறை தேவைப்படும். புதிய முயற்சிகளை இப்போதைக்கு தவிர்ப்பது நல்லது.

பிப்ரவரி: பிள்ளைகளின் செயல்பாட்டைக் கண்டு கோபத்திற்கு ஆளாவீர்கள். நல்லவர்களின் வழிகாட்டுதலைப் பின்பற்றுவது நல்லது. அஷ்டமத்து சனியின் தாக்கத்தால் எந்தச் செயலையும் நிறைவேற்ற கடின முயற்சி தேவைப்படும். பொறுமை அவசியம்.

மார்ச்: கணவன், மனைவிக்கு இடையே கருத்துவேறுபாடு உண்டாகும். பணிச்சுமை அதிகரிக்கும். தொழிலில் மந்தநிலை உருவாகும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். நண்பர்களின் உதவியைக் கேட்டுப் பெறுவீர்கள்.

ஏப்ரல்: மருத்துவச் செலவு நாளுக்கு நாள் அதிகரிக்கும். வெளியூர்ப்பயணத்தை ஆதாயம் கருதிச் சென்றாலும் லாபமிருக்காது. குடும்பத்தில் விட்டுக் கொடுத்துச் செல்வது அவசியம். பிள்ளைகளின் செயல்பாடு மனதிற்கு ஆறுதல் அளிக்கும்.

மே: சுக்கிரன், புதன், சூரியன் போன்ற மாத கிரகங்களால் நன்மை உண்டாகும். மாணவர்கள் எதிர்கால நன்மை கருதி படிப்பது அவசியம். வியாபாரத்தில் ஓரளவு ஆதாயம் உண்டு. வாடிக்கையாளர்களின் ஆதரவைக் கண்டு மகிழ்வீர்கள்.

ஜூன்: பொருளாதாரப் பற்றாக்குறைக்கு ஆளாவீர்கள். சிலருக்கு கடன் வாங்கும் நிர்பந்தம் ஏற்படும். ராசிநாதன் குருவால் சில நன்மைகளைப் பெறுவீர்கள். தொழிலதிபர்கள் மறைமுகப் போட்டியைச் சந்திப்பர். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர்.

ஜூலை: அஷ்டமச்சனியின் வேகம் குருவின் பார்வையால் சற்று தணியும். வீட்டில் சுபவிஷயம் குறித்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரம்,தொழிலில் வளர்ச்சி ஏற்பட்டு லாபம் அதிகரிக்கும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும்.

ஆகஸ்ட்: எதிர்நீச்சல் போட்டு வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும். சிலர் வெளிநாட்டில் வேலை கிடைக்கப் பெறுவர். புதிதாக வீட்டுமனை வாங்கும் எண்ணம் நிறைவேறும்.

செப்டம்பர்: தொலைதூரத்தில் இருந்து சுபசெய்தி வந்துசேரும். வாகனப்பயணத்தில் கவனம் தேவை. அடிக்கடி கோபத்திற்கு ஆளாவீர்கள். பொறுமையைக் கடைபிடிப்பது நல்லது. பெற்றோரின் உடல்நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

அக்டோபர்: நல்லவர்களின் ஆலோசனையை ஏற்று நடப்பது நல்லது. எதிரிகளின் மறைமுக தொல்லைக்கு ஆளாவீர்கள். தெய்வவழிபாட்டால் மன நிம்மதி காண முற்படுவீர்கள். தொழிலில் விடாமுயற்சியும், கடின உழைப்பும் தேவைப்படும்.

நவம்பர்: வக்ர குருவால் சிரமம் அதிகரிக்கும். குடும்பத்தில் செலவு அதிகரிப்பதால் சேமிப்பு கரையும். பங்குதாரர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்புண்டு. ஆரோக்கியம் அதிருப்தி அளித்தாலும் மனதில் தைரியம் சிறிதும் குறையாது.

டிசம்பர்: உறவினர்களின் ஒத்துழைப்பு ஓரளவே கிடைக்கும். திருமண முயற்சியில் தடை பல உண்டாகும். பிள்ளைகள் பிடிவாதத்துடன் நடந்து கொள்வர். நண்பர்களின் உதவி கிடைக்கும். முக்கியத் தேவைக்காக சிலர் கடன் வாங்கும் கட்டாயம் உருவாகும்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar