Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் கோயில் சன்னதி ... கோவில்களை பற்றிய அனைத்து விவரங்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சையில் சோழர் கால நந்தி சிற்பம் கண்டெடுப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

31 ஜன
2013
11:01

தஞ்சாவூர் அருகில் உள்ள அன்னம்பேட்டை கிராமத்தில், சோழர் கால நந்தி சிற்பம் கண்டெடுக்கப்பட்டது. இச்சிற்பம், 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என, கூறப்படுகிறது. தஞ்சாவூரிலிருந்து, 10 கி.மீ., தொலைவில், திட்டை வழியாக, கும்பகோணம் செல்லும் சாலையில், அன்னம்பேட்டை உள்ளது. இங்கு, தஞ்சாவூர் வடக்கு வாசல் பகுதியில் அமைந்துள்ள, "சிரேயஸ் சத்திரத்திற்கு வருபவர்களுக்கு, நாள்தோறும் உணவு வழங்க, இவ்வூரிலிருந்த நிலத்தில் இருந்து நெல் வழங்கப்பட்டதாக, இலக்கிய குறிப்புகள் கூறுகின்றன. சிரேயஸ் சத்திரம், கடந்த ஆண்டு வரை, அரசர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தங்கும் விடுதியாக செயல்பட்டு வந்தது. இது குறித்து, சரசுவதி மகால் நூலக தமிழ்ப்பண்டிதர் மணி.மாறன் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில், அன்னம்பேட்டையில், இடிபாடுற்று, தற்போது, அவ்வூர் மக்களால் சீரமைக்கப்பட்டு வரும் சிவன் கோவில் அருகில், சோழர் காலத்தைச் சேர்ந்த, ஜேஷ்டாதேவி சிற்பத்தை கண்டறிந்துள்ளார். ஒரே கல்லில், அழகிய புடைப்புச் சிற்பமாகக் காணப்படும், ஜேஷ்டாதேவியின் தலைப்பாகம் சிதைந்த நிலையில் காணப்படுகிறது. அச்சிற்பத்தின் வலதுபுறம் மனித உடலும், காளையின் தலையும் கொண்ட ஜேஷ்டாவின் மகன் விருஷபன் உருவம், இடதுபுறம், அவள் மகள் நமனை உருவம் காணப்படுகின்றன. சிதைவுற்ற சிவன் கோவிலில் இருந்த சோழர் கால நந்தி சிற்பம், அருகில் உள்ள கோவிலில் எடுத்து வைக்கப்பட்டுள்ளது. இடிபாடுற்ற சிவன் கோவில் கருவறையில், சோழர் கால சிவலிங்கம் நல்ல நிலையில் உள்ளது.

இது குறித்து, தஞ்சாவூர் சரஸ்வதி மகால் தமிழ் பண்டிதர் கூறியதாவது: அன்னம்பேட்டை கிராமத்தின் கிழக்கே, ஒரு சிறிய மண்டபத்தில், தாயுமானவர் சிற்பம் உள்ளது. தாயுமானவர் மகன் கனகசபாபதிப் பிள்ளை, இவ்வூரில் தங்கியிருந்துள்ளார். அவரின் வழித்தோன்றல், இன்றளவும் அங்கு வழிபாடு செய்து வருகின்றனர். மாணிக்கவாசகரின் ஓவியம், இவ்வூர் மாரியம்மன்கோவிலில் காணப்படுகிறது. தொடர்ச்சியாக, இவ்வூருக்கு, 1,000 ஆண்டு கால வரலாறு இருப்பதை, கள ஆய்வின் போது கண்டறிய முடிந்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆலங்குடி: குரு பெயர்ச்சியை முன்னிட்டு, குரு பரிகார தலமான ஆலங்குடியில் இன்று லட்சார்ச்சனை துவங்கியது. ... மேலும்
 
temple news
கடலூர்; கடலூர் அடுத்த புதுவண்டிப்பாளையம் கரையேறவிட்டக்குப்பத்தில் அப்பர் குளத்தில் கரையேறும் ... மேலும்
 
temple news
மதுரை : அழகர் மலையிலிருந்து ஏப்., 21ல், தங்கப் பல்லக்கில் புறப்பட்டார் அழகர். ஏப்., 23ல் காலை வைகையாற்றில் ... மேலும்
 
temple news
உடுமலை; பூலாங்கிணறு முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.உடுமலை பூலாங்கிணறு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar