Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவிந்தா கோஷத்துடன் சொர்க்கவாசல் ... அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்: பக்தர்கள் பரவசம் அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அயோத்தி ராமர் கோவிலில் பிரதிஷ்டை தின இரண்டாம் ஆண்டு விழா: பக்தர்கள் குவிந்தனர்
எழுத்தின் அளவு:
அயோத்தி ராமர் கோவிலில் பிரதிஷ்டை தின இரண்டாம் ஆண்டு விழா: பக்தர்கள் குவிந்தனர்

பதிவு செய்த நாள்

31 டிச
2025
11:12

அயோத்தி: அயோத்தி ராமர் கோவிலில் பிரதிஷ்டை தின இரண்டாம் ஆண்டு விழா மற்றும் துவாதசி உற்சவத்தை முன்னிட்டு சிறப்பு ஹோமம் வழிபாடு நடைபெற்றது.


அயோத்தி ஸ்ரீ ராம் ஜன்மபூமியில் பிரதிஷ்டை தின இரண்டாம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் 108 வேத பாராயணம், ஸ்ரீ ராமசரிதமானஸ் பாராயணம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது. பிரதிஷ்டா துவாதசி பட்டோற்சவ கொண்டாட்டங்களின் முக்கிய தினமான இன்று, ஸ்ரீ ராம் ஜன்மபூமி கோவிலில் யாகபூஜை, பல்வேறு சடங்குகள் செய்யப்பட்டன. இதில் தத்துவ கலசம், தத்துவ ஹோமம், மன்யு சூக்த ஹோமம், ராம தாரக மந்திர ஹோமம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீராமரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பிரதிஷ்டா துவாதசி உற்சவத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் குவிந்து வருகின்றனர். 


பிரதமர் வாழ்த்து: பிரதிஷ்டை தின இரண்டாம் ஆண்டு விழா குறித்து பிரதமர் மோடி கூறியதாவது; இன்று அயோத்தியின் புனித பூமியில் ராமர் கோவில் பிரதிஷ்டை செய்யப்பட்ட இரண்டாம் ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது; இந்த விழா நமது நம்பிக்கை மற்றும் மரபுகளின் தெய்வீக விழாவாகும்; உலகம் முழுவதும் உள்ள ராம பக்தர்களுக்கு வாழ்த்துகள். இவ்வாறு குறிபிட்டுள்ளார்.


நெகிழ்ச்சியில் பக்தர்கள்: முன்னதாக நேற்று ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்திரத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரதிஷ்டா துவாதசி படோத்சவ நிகழ்வுகளின் இரண்டாம் நாளில், மோஹித் ஷெவானி மற்றும் அவரது குழுவினர் "காதா ஸ்ரீ ராம் மந்திர் கி" என்ற தலைப்பில் ஒரு தனித்துவமான மேடை நாடகத்தை வழங்கினர். படையெடுப்பாளர்களால் அழிக்கப்பட்டு, அவமதிக்கப்பட்ட அயோத்தியில், பிரபு ஸ்ரீ ராம்லல்லா சர்க்காரை மீண்டும் பிரதிஷ்டை செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களையும், தியாகங்களையும் இந்த நாடகம் சித்தரித்தது. அந்த நாடகத்தின் கதைக்களம் விறுவிறுப்பாகவும், பார்வையாளர்களை ஈர்க்கும் வகையிலும் அமைந்திருந்தது. அது அங்கு கூடியிருந்த பக்தர்கள்களை உணர்ச்சிவசப்படச் செய்து, நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மேல்சாந்தியாக, நாராயணன் நம்பூதிரி தேர்வு ... மேலும்
 
temple news
ஆண்டிபட்டி; ஆண்டிபட்டி அருகே மாவூற்று வேலப்பர் கோயிலில் பங்குனி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
பங்குனி அமாவாசை முன்னோர்கள், குலதெய்வ வழிபாட்டிற்கு உகந்த நாளாகும். தீர்த்தக் கரைகளில் முன்னோருக்கு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar