Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பகோணம் ராஜகோபாலசுவாமி ... திருப்பரங்குன்றத்தில் பங்குனி திருவிழா கொடியேற்றம்! திருப்பரங்குன்றத்தில் பங்குனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மருதமலை கும்பாபிஷேக விழா துவக்கம்: இறைவனின் அபிஷேகப்பொருளும் பலன்களும்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

16 மார்
2013
12:03

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா, வரும் 18ம் தேதி நடக்கிறது. இவ்விழா, காலை 7:30 மணிக்கு, வேத பாராயணம், திருமுறை பாராயணம், விநாயகர் பூஜை, புண்யாஹம், பஞ்சகவ்யம், மஹா கணபதி ஹோமம், அனுக்ஞை, தன பூஜை, கஜ பூஜை, கோ பூஜை மற்றும் அஸ்வ பூஜைகளுடன் துவங்கியது.

மருதமலை சுப்பிர மணிய சுவாமி திருக்கோவிலில் நித்திய பூசைகள் தார்மீக ஆகமப்படியும், திருவிழாக்கள் காரண ஆகமப்படியும் நிகழ்கின்றன. தினசரி காலை 6.00 மணிக்கு விஸ்வரூப தரிசனம் ( உஷக்காலம் ), காலை 9.00 மணிக்கு காலசந்தி பூஜை, மதியம் 12.00 மணி உச்சிகாலம் பூஜை, பிற்பகல் 1.00 முதல் 2.00 மணி வரை திருக்கோவில் பகலில் காப்பிடுதல், மாலை 5.00 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 8.30 மணிக்கு அர்த்தஜாமம் பூஜை ( இராக்காலம் ) நடக்கும். ( பகலில் திருக்காப்பிடுதல் விசேஷ நாட்களில் மாறுபடும்) திருவிழா மற்றும் கார்த்திகை நாட்களில் உஷக்கால பூஜை ( விஸ்வரூப தரிசனம் ) அதிகாலை 4.00 மணிக்கு நடைபெறுகிறது.  இவ்வாறு இறைவனுக்கு  பூஜைகளின்போது, செய்யப்படும் அபிஷேகப் பொருளுக் கும், அதன் பலன்களும் உள்ளது.

*நன்னீர் - தூய்ப்பிக்கும்
*நல்லெண்ணெய் - நலம் தரும்
*பச்சரிசிமாவு - கடன் தீரும் பாபநாசம்
*மஞ்சள் தூள் - நல்நட்பு வாய்ப்பிக்கும் அரசுவசியம்
*திருமஞ்னத்தூள் - நோய் தீர்க்கும்
*பஞ்சகவ்யம் - தீதழிக்கும் ஆன்மசுத்தி
*பசும்பால் - நீண்ட ஆயுள் தரும்
*பசுந்தயிர் - மகப்பேறு வாய்க்கும்
*பஞ்சாமிருதம் - தீர்க்காயுள், வெற்றி தரும்
*தேன் - சுகம், சங்கீத விருத்தி
*நெய் - சுகவாழ்வு, மோட்சம்
*சர்க்கரை - எதிரியை ஜெயிக்கும்
*இளநீர் - நல்சந்ததியளிக்கும்
*கருப்பஞ்சாறு - ஆரோக்கிய மளிக்கும்
*நார்த்தம்பழம் - சந்ததி வாய்க்கும்
*சாத்துக்குடி - துயர் துடைக்கும்
*எலுமிச்சை - யமபய நாசம், நட்புடை சுற்றும்
*திராட்சை - திட சரீரம் அளிக்கும்
*வாழைப்பழம் - பயிர் செழிக்கும்
*மாம்பழம் - செல்வம், வெற்றி தரும்
*பலாப்பழம் - மங்களம் தரும் யோக சித்தி
*மாதுளை - பகை நீக்கும், கோபம் தவிர்க்கும்
*தேங்காய் துருவல் - அரசுரிமை
*அன்னம் - விளை நிலங்கள் நன்மை தரும்
*சந்தனம் - சுகம், சுவர்க்க போகம் தரும்
*பன்னீர் - சருமம் காக்கும்
*கும்பஜலம் - பிறவிப்பயன் அளிக்கும்
*சந்தாபிஷேகம் - நலம் எல்லாம் அளிக்கும்
*ஸ்வர்ணம் ( அ) ரத்னாபிஷேம் - சகல சௌபாக்கியமும் கிட்டும்

மருதமலை முருகன் கோவில் அருகிலுள்ள முக்கிய திருக் கோவில்கள்..

*மருதமலையிலிருந்து சுமார் 12 கி.மீ., தொலைவில் பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.
*சுமார் 30 கி.மீ., தொலைவில் மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோவில் அமைந்துள்ளது.
*சுமார் 15 கி.மீ., தொலைவில் கோவை நகரில் அருள்மிகு தண்டு மாரியம்மன் கோவிலும். கோணியம்மன் கோவிலும் உள்ளது.
*சுமார் 22 கி.மீ., தொலைவில் கோவை -பொள்ளாச்சி ரோட்டில் அருள்மிகு ஈச்சனாரி விநாயகர் கோவிலும் அமைந்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆலங்குடி: குரு பெயர்ச்சியை முன்னிட்டு, குரு பரிகார தலமான ஆலங்குடியில் இன்று லட்சார்ச்சனை துவங்கியது. ... மேலும்
 
temple news
கடலூர்; கடலூர் அடுத்த புதுவண்டிப்பாளையம் கரையேறவிட்டக்குப்பத்தில் அப்பர் குளத்தில் கரையேறும் ... மேலும்
 
temple news
மதுரை : அழகர் மலையிலிருந்து ஏப்., 21ல், தங்கப் பல்லக்கில் புறப்பட்டார் அழகர். ஏப்., 23ல் காலை வைகையாற்றில் ... மேலும்
 
temple news
உடுமலை; பூலாங்கிணறு முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.உடுமலை பூலாங்கிணறு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar