Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீடுகளில் பூக்கோலமிட்டு, கோவிலுக்கு ... கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஹயக்ரீவருக்கு சிறப்பு அபிஷேகம் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாகை முத்துமாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் திருவிழா விமர்சை
எழுத்தின் அளவு:
நாகை முத்துமாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் திருவிழா விமர்சை

பதிவு செய்த நாள்

06 செப்
2025
10:09

நாகை; நாகை அடுத்த அக்கரைப்பேட்டை முத்துமாரியம்மன் ஆவணி பூச்சொரிதல் திருவிழா கோவிலில் வெகு விமர்சையாக  நடைபெற்றது.  மேளதாளம் முழங்க, அம்மனுக்கு பூந்தட்டு ஏந்தி வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுவாமிக்கு பூக்களால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர்.


நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற முத்து மாரியம்மன் கோவிலின் ஆவணி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 3,ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் கோலாகலமாக துவங்கியது. 14, நாட்கள் நடைபெறும் ஆவணி திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சியான இன்று அம்மனுக்கு பூச்சொரிதல் அபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. கீச்சாங்குப்பம் மகா காளியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட பூச்சொரிதல் விழாவில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட  பக்தர்கள் அம்மனுக்கு பூந்தட்டு ஏந்தியவாறு அக்கரைப்பேட்டை முத்துமாரியம்மன் கோவில்வரை ஊர்வலமாக சென்றனர். அப்போது மேளதாளம் முழங்க, வானவேடிக்கை என பூச்சொரிதல் விழா களைகட்டியது. பின்னர் கோவிலை சென்றடைந்த பக்தர்கள் அங்கு தங்களது நேர்த்திக்கடன் நிறைவேற்றும் விதமாக அம்மனுக்கு பூவால் அபிஷேகம் செய்து மனமுருக சுவாமி தரிசனம் செய்தனர். அக்கரைப்பேட்டை முத்து மாரியம்மன் ஆலயத்தின் முக்கிய திருவிழாவான செடில் உற்சவம் வரும் 14 ஆம் தேதி வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.  இதில் பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனை நிறைவேற்றும் விதமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளை செடில் மரத்தில் ஏற்றி சுற்ற உள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், மாமன்னன் ராஜராஜசோழனின் 1040வது சதய விழா அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு,  ... மேலும்
 
temple news
கோவை; ஐப்பசி மாதம் ஏகாதசி விரதத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம்,  துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன், உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துடன் ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஐப்பசி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவிற்க்கு முகூர்த்தக்கால் நடும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar