பதிவு செய்த நாள்
16
ஏப்
2013
10:04
திருப்பூர்: காங்கயம், சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில் "ஆண்டவன் கட்டளை கண்ணாடி பேழையில், நேற்று பென்சில் பாக்ஸ் வைக்கப்பட்டது. காங்கயம், சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் கண்ணாடி பேழை உள்ளது. கனவில், சுவாமி கூறும் பொருட்களை, கோவிலுக்கு பக்தர்கள் கொண்டு வருவர். அதுகுறித்து சுவாமியிடம் பூ போட்டு, அனுமதி கேட்கப்படும். அனுமதி கிடைத்ததும். அந்த பொருள் பேழையில் வைக்க அனுமதிக்கப்படும். பேழையில் தண்ணீர் வைத்தபோது, சுனாமி; மணல் வைத்தபோது, மணல் விற்பனையில் பிரச்னை; மஞ்சள் வைத்தபோது மஞ்சளில் ஏற்பட்ட விலை ஏற்றம் என, அத்தகைய பொருள் சம்பந்தமாக ஏதாவது ஒரு சம்பவம் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. கடந்த 2012, நவ., 5ம் தேதி, பழனிசாமி என்ற பக்தர் கொண்டு வந்த ஐந்தாம் வகுப்பு தமிழ் மற்றும் பிளஸ் 1 ஆங்கில புத்தகம், சுவாமி அனுமதி பெற்று, பேழையில் வைக்கப்பட்டது. நேற்று, திருச்சியை சேர்ந்த பழனிசாமி என்பவர் கோவிலுக்கு வந்து, தனது கனவில் சுவாமி முருகன் வந்து, பேழையில் பென்சில் பாக்ஸ் வைக்குமாறு கூறியதாக தெரிவித்தார். கோவில் அர்ச்சகர்கள், சுவாமி முன் பூ போட்டு அனுமதி பெற்று, கண்ணாடி பேழையில் பென்சில் பாக்ஸ் வைத்தனர்.